இப்படி ஒரு முறை வெந்தயக் குழம்பு வைத்தால் ரொம்ப ருசியாக இருக்கும். செய்வதும் எளிமையானது. அதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
வெந்தயம் – ஒரு கைப்பிடி அளவு
பூண்டு – 15 அல்லது 20 பற்கள்
புளி – நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
வெல்லம் (விருப்பப்பட்டால்) – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும். கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மீதியுள்ள வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.இத்துடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை நன்றாகக் குழைய வதக்கவும்.தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். அடுத்து அதில் உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும். குழம்பு திக்கான பதம் வந்தவுடன் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும். சுவையான வெந்தயகுழம்பு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“