புதுமணத் தம்பதிகள் உற்சாகம்: தலைத் தீபாவளி கொண்டாட்ட நடைமுறைகள் எப்படி?

தம்பதியர் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, கடவுளை வழிபட்டனர். பின்னர், பட்டாசுகள் மற்றும் கம்பி மத்தாப்புகள் கொளுத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தம்பதியர் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, கடவுளை வழிபட்டனர். பின்னர், பட்டாசுகள் மற்றும் கம்பி மத்தாப்புகள் கொளுத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

author-image
WebDesk
New Update
thala diwali

புகைப்படம் - எக்ஸ்

திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் தீபாவளி, தலைத் தீபாவளி என்று அழைக்கப்பட்டு, தமிழக கலாச்சாரத்தில் மிகச் சிறப்பான மற்றும் பாரம்பரியமிக்க நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புதுமணத் தம்பதியர் தங்கள் திருமணத்திற்குப் பிந்தைய முதலாவது தீபாவளியை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். புதிதாக திருமணமாகி சென்ற பெண்கள் தங்களது பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து தலை தீபாவளியைக் கொண்டாடினார். அதிகாலையிலேயே எழுந்து, புனித நீராடி, புத்தாடை அணிந்து, கடவுளை வழிபட்ட பின், பட்டாசுகள் வெடித்தும், கம்பி மத்தாப்புகள் கொளுத்தியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisment

தலைத் தீபாவளி கொண்டாட்டம் பொதுவாக மணமகளின் தாய்வீட்டில்  தான் நடைபெறுவது வழக்கம். அதிகாலையிலேயே எழுந்து, தலையில் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் புனித நீராடுவது முக்கிய நடைமுறையாகும். நீராடிய பின், குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். பாரம்பரிய தீபாவளி பலகாரங்களைச் சமைத்து, அவற்றை கடவுள் முன் படைத்து சுவாமி தரிசனம் செய்வது குடும்ப வழக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.பூஜை முடிந்த பின், புதுமணத் தம்பதிகள் பட்டாசுகள் வெடித்தும், கம்பி மத்தாப்புகள் கொளுத்தியும், தங்கள் கொண்டாட்ட உணர்வை வெளிப்படுத்தினர்.

இந்தக் கொண்டாட்டம் குறித்துப் பேசிய புதுமணத் தம்பதிகள், தங்கள் புதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மணமகள் கூறுகையில், "முன்பு குடும்பத்தினருடன் கொண்டாடினேன். இப்போது புதுசா கணவர், மாமனார், மாமியாருடன் கொண்டாடுவது ஒரு புதிய அனுபவமாகவும், ரொம்பவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது" என்று தெரிவித்தார். மணமகன் தெரிவிக்கையில், "இதுவரை தனியாக கொண்டாடியிருப்போம். ஆனால், திருமணம் முடிந்து புதிய குடும்பம் மற்றும் புதிய குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடுவது வாழ்விலே ஒரு புதுவித அனுபவமா இருக்குது" என்று கூறி, அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

புதிய தம்பதியினர் இது ஒரு புதுவித அனுபவமாக இருந்ததாக தெரிவித்தனர். மணமகள், தனது கணவர் மற்றும் புதிய குடும்பத்துடன் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். மணமகன், புதிய குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடுவது வாழ்வின் ஒரு புதிய அத்தியாயம் போல இருப்பதாகத் தெரிவித்தார்.

Advertisment
Advertisements
Diwali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: