Advertisment

இந்த கீரையில்... இப்படி தோசை செய்யுங்க: செம்ம ருசியா இருக்கும்

ஒரு முறை இப்படி முடக்கத்தான் கீரையில் தோசை செய்து கொடுங்க. இது மூட்டு வலி பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
hjk

ஒரு முறை இப்படி முடக்கத்தான் கீரையில் தோசை செய்து கொடுங்க. இது மூட்டு வலி பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

Advertisment

 தேவையான பொருட்கள்

 இட்லி அரிசி - 2 கப்

 வெந்தயம் - 1 தேக்கரண்டி

 முடக்கத்தான் கீரை - 3 கப்

 உப்பு - தேவைக்கேற்ப

 மிளகு - 1 தேக்கரண்டி

 சீரகம் - 1 தேக்கரண்டி

 பூண்டு - 3 பல்

 சின்ன வெங்காயம் - 5.

 செய்முறை: இட்லி அரிசி, வெந்தயம் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து இரவு முழுவதும் புளிக்க விடவும். இப்போது முடக்கத்தான் கீரை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன், மிளகு, சீரகம், பூண்டு பல், சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த முடக்கத்தான் விழுதை, தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைக்கவும். அடுத்ததாக அடுப்பில்

தோசைக்கல் வைத்து சூடானதும் மாவு ஊற்றி பின், சுற்றி எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறலாம். நல்லெண்ணெய் ஊற்றி வேக வைத்தால் சுவையான இருக்கும்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment