/indian-express-tamil/media/media_files/9L5qKA4KIS1LwLpp20Xd.jpg)
செய்திவாசிப்பாளர் நிர்மா பெரியசாமி, தனது பணியில் நடைபெற்ற அனுபவத்தை சமீபத்தில் மனம்விட்டு பேசி உள்ளார்.
செய்திவாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி, வணக்கம் சொல்லும் விதம் அனைவருக்கும் பிடித்த ஒன்று. மேலும் இவர் தமிழை மிகவும் நெயர்த்தியாக உச்சரிப்பதில் சிறந்தவர். மேலும் இவர் செய்தி வாசிக்கும்போது மனதை பாதிக்கும் சம்பவங்கள் நடந்திருக்கிறது. ஆனால் நாம் அப்போது ஒன்றும் செய்ய முடியாது. நாம் தொடர்ந்து செய்திதான் வாசிக்க வேண்டும்.
குறிப்பாக ஒரு முறை நடிகர் சிவாஜி கணேசன் மரணச் செய்தியை நான் வாசிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். தற்போது போல் அப்போது லைவ் ரெக்கார்டிங் கிடையாது. எல்லா செய்தியையும் நாங்கள் கட் என்று சொல்லித்தான் முடிக்க வேண்டும்.
நடிகர் சிவாஜியின் மரணச் செய்தியை வாசிக்கும்போது, எனது தலையில் இருந்த பூவை மட்டும் எடுத்து வைத்துவிட்டு நான் செய்தியை வாசித்தேன். மனம் மிகவும் கனமாக இருந்தது.
இதுபோல விபத்து தொடர்பான செய்திகளை வாசிக்கும்போது பதற்றம் ஏற்படும். சில நல்ல செய்திகளையும் வாசித்திருக்கிறேன். 10 மற்றும் 11ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றவர்களை பற்றி செய்தி வாசித்திருக்கிறேன். பின்நாட்களில் சமந்தபட்ட நபர்கள் அந்த மதிப்பெண் பெற்றது நாதான் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். மேலும் ஒருமுறை நீதிபதி ஒருவர், நான் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டதை நீங்கள்தான் டிவியில் சொன்னீர்கள் என்று என்னிடம் வந்து சொல்லி பாராட்டினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us