2024ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் இவர் அணிந்த புடவை பல்வேறு முக்கிய தகவலை நம்மக்கு சொல்கிறது.
இந்த புடவை ராமரின் நீல நிறத்தை குறிப்பதாக இருந்தது. இது காந்தா ( Kantha, embroidery) என்ற தையல் பாணியை கொண்டது. இந்த காந்தா தையல் முறை வங்கதேசத்தில்தான் முதலில் தோன்றியது. இந்தியாவின் தையல் கலையில் இது மிகவும் பழமையான ஒன்று.
காந்தா ( Kantha) என்ற வார்த்தை சமஸ்கிருத சொல்லான ’காந்தோ’ என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். தற்போது இந்த வேலைபாடுகள் கொண்ட ஆடைகளை மேற்கு வங்கம், ஒடிசா, வங்கதேசத்தில் உள்ள கிராமப்புர பெண்கள் தயாரிக்கின்றனர்.
இது தொடர்பாக ஆடை வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் செய்யும் அனுபவம் கொண்ட அம்ரிஷ் சோனாரி கூறுகையில் : “ சீரான நேர் கோட்டில் தையல் போடும் முறையாக இது உள்ளது. பழைய துணிகள், சேலைகளை வைத்து சூடான மெத்தை உறை அல்லது மெத்தை போல் செய்வதுதான் இந்த தையல் முறையாகும். மேலும் ராமரின் நிறம் நீலம் என்பதால் அதை குறிப்பிடும் வகையில் அவர் ராமர் நீலத்தை அணிந்துள்ளார்” என்று அவர் கூறினார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பட்ஜெட்டில் தெரிவித்ததுபோல, அவர் புடவை தேர்விலும் இதை அவர் அமல்படுத்தி உள்ளார். 2021ம் ஆண்டு பட்ஜெட்டில் போச்சம்பள்ளி புடவையை அணிந்திருந்தார். அது சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது. இதில் நாவலகுண்டா வேலைபாடுகள் இருந்தது. இந்நிலையில் பாதி வெள்ளை நிறம் மற்றும் க்ரீம் நிறங்களில்தான் அதிகமாக நிர்மலா சீதாரமன் சேலை அணிகிறார்.
2022ம் ஆண்டில் பிரவுன் பொம்கை புடவையை ( rusty brown Bomkai) அணிந்திருந்தார். 2020ம் ஆண்டில் மஞ்சள் நிற சில்க் புடவையில் நீல நிறத்தில் மெலிதனா பாடர் உள்ள புடவையை அணிந்திருந்தார். 2019ம் ஆண்டு பிங்க் நிற மங்களகிரி புடைவை, கோல்டன் பாடர் உள்ள புடவையை அணிந்திருந்தார்.
Read in English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“