Nandhini Serial Actress Nithya Ram: வெள்ளித்திரையில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் சுந்தர் சி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடர் மூலம் சின்னத்திரையிலும் நுழைந்தார். இதனை சுந்தர் சி-யின் மனைவியும் நடிகையுமான குஷ்பு தயாரித்தார். மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடரில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நித்யா ராம்.
Advertisment
நித்யா ராம்
ஃபேண்டஸி நாடகமான நந்தினியில் நாக கன்னியாக நடித்து இளைஞர்களையும் கவர்ந்தார். கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், அங்கேயும் சில சீரியல்களில் நடித்துள்ளார். பின்னர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘முட்டு மனசே’ என்ற கன்னட படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமானார். ஆனால் சரியான வாய்ப்புகள் அமையாததால் தனது முழு கவனத்தையும் சீரியல் பக்கமே மீண்டும் திருப்பினார். தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் அவ்வப்போது தலைக்காட்டி வருகிறார்.
ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..
Advertisment
Advertisements
இவருக்கு 2014-ம் ஆண்டு வினோத் என்பவருடன் திருமணமானது. ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில் டிசம்பர் 6-ம் தேதி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெளதம் என்பவரை மணக்கிறார் நித்யா. இது பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாம். நித்யாவின் அம்மாவும், கெளதமின் அம்மாவும் நெருங்கிய தோழிகள் என்பதால், அவர்களே தங்களது வாரிசுகளை ஒரே புள்ளியில் இணைத்துவிட்டனராம்.
இது குறித்து முன்னணி இதழுக்கு பேட்டியளித்த நித்யா, “ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கெளதமுக்கு, நான் ஒரு நடிகை எனத் தெரியாது. அவர் ஏப்ரல் மாதத்தில் சுமார் 10 நாட்கள் இந்தியாவுக்கு வந்திருந்தார், அப்போது தான் நாங்கள் சந்தித்தோம். நானும் என் தங்கையும் நடிகைகள் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அந்த சந்திப்பின் போது தான் தெரிந்துக் கொண்டார். அதன் பின்னர் ‘நந்தினி’ சீரியலைப் பார்த்து விட்டு பாராட்டினார்” என்றார்.
சீரியலுக்கு ‘பை பை’ சொல்லும் நித்யா, திருமணம் செய்துக் கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிறாராம்.