/indian-express-tamil/media/media_files/2025/05/30/rFkOeFngRQFVQ1bnV8Qy.jpg)
மருதாணி இல்லாமல் தேங்காய் சிரட்டையை வைத்து 10 நிமிடத்தில் கை சிவக்கும் அளவில் மெஹந்தி வைப்பது எப்படி என்று புதுமை சமையல் & கிராஃப்ட்ஸ் (puthumai samayal & crafts) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான முறையைக் கூறியிருக்கிறார்கள்.
எங்கேயாவது ஃபங்ஷனுக்கு போக வேண்டும் என்றால், மருதாணி வைக்க முடியவில்லையே என்று கவலைப் படுகிறீர்களா? மருதாணி வேண்டாம், தேங்காய் சிரட்டையை வைத்து மெஹந்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க, 10 நிமிடத்தில் கை சிவக்கும்.
பெண்கள் பலரும் எங்கேயாவது ஃபங்ஷனுக்கு போக வேண்டும் என்றால், மருதாணி வைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், மருதாணி வைக்க வேண்டும் என்றால், முன் தின நாள் இரவே மருதாணியை அரைத்து வைத்தால் மட்டுமே கைகள் நன்றாக சிவந்து இருக்கும். ஆனால், அதற்கு நேரம் இல்லாதவர்கள், மெஹந்தி போடவும் நேரம் இல்லாதவர்கள், மருதாணி வேண்டாம், தேங்காய் சிரட்டையை வைத்து மெஹந்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க, 10 நிமிடத்தில் கை சிவக்கும்.
மருதாணி இல்லாமல் தேங்காய் சிரட்டையை வைத்து 10 நிமிடத்தில் கை சிவக்கும் அளவில் மெஹந்தி வைப்பது எப்படி என்று புதுமை சமையல் & கிராஃப்ட்ஸ் (puthumai samayal & crafts) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான முறையைக் கூறியிருக்கிறார்கள்.
முதலில் ஒரு சிறிய மண் கிண்ணம் போன்ற ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஸ்டவ் மீது வையுங்கள். ஒரு தேங்காய் சிரட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை சிறிய துண்டுகளாக உடைத்துக்கொள்ளுங்கள். தேங்காய் சிரட்டையை அந்த மண் கிண்ணத்தில் போடுங்கள். அதன் மீது 1 டீஸ்பூன் சீரகம் போடுங்கள், அடுத்து 1 டீஸ்பூன் சர்க்கரை தூவுங்கள், 1 ஸ்பூன் டீ தூள் தூவுங்கள். அதில் ஒரு சிறிய பவுல் வைத்து அதன் மீது ஒரு மூடியை வைத்து காற்று போகாமல் மூடுங்கள். அதன் மீது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வையுங்கள்.
இப்போது கேஸ் ஸ்டவ்வைப் பற்ற வைத்து லோ ஃபிலேமில் வையுங்கள். மூடியின் வழியாக புகை வரத் தொடங்கும்போது, கேஸ் ஸ்டவ்வை நிறுத்துங்கள். இப்போது கையை சுட்டுக்கொள்ளாமல் பாதுகாப்பாக திறந்து பாருங்கள். அந்த சின்ன பவுலில் சிறிது தண்ணீர் இருக்கும். அந்த தண்ணீரில் கால் டீஸ்பூன் அளவு சர்க்கரை போடுங்கள். நன்றாகக் கலக்குங்கள். அதனுடன் குங்குமம் போட்டு கலக்குங்கள். இப்போது அதை எடுத்து உங்கள் கைகளில் மருதாணி போல தடவுங்கள். 5 நிமிடம் கழித்து கைகளைக் கழுவிடுங்கள். கை மருதாணி வைத்தது போல நன்றாக சிவந்து இருக்கும். இது 2 நாள் வரை அப்படியே இருக்கும். இதை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us