சைனஸ், ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான நொச்சி இலைகளைப் (Vitex negundo) பயன்படுத்தி இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணலாம் என்கிறார் டாக்டர் மைதிலி. நொச்சி இலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணிப் பண்புகள் தலைவலி, சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகச் செயல்படுகின்றன.
Advertisment
நீராவி பிடித்தல்:
ஒரு கைப்பிடி நொச்சி இலைகளை எடுத்து, நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். இலைகளைத் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு போர்வையால் உங்களை மூடிக்கொண்டு, இலைகள் மற்றும் தண்ணீருடன் நீராவி பிடிக்கவும்.
இதை 30 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து செய்வதன் மூலம் தலைவலி மற்றும் தலை பாரம் குறையும்.
Advertisment
Advertisements
தலையணையாகப் பயன்படுத்துதல்:
ஒரு மெல்லிய துணியில் ஒரு கைப்பிடி அளவு நொச்சி இலைகளை வைத்து, அதை ஒரு முடிச்சாகக் கட்டி தலையணையாகப் பயன்படுத்தலாம்.
மாற்றாக, நீங்கள் பயன்படுத்தும் தலையணையின் உள்ளே இருக்கும் பஞ்சை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக நொச்சி இலைகளை நிரப்பி, அந்தத் தலையணையைப் பயன்படுத்தலாம்.
இதை தினமும் செய்வதன் மூலம் தலைவலி மற்றும் தலை பாரம் குறையும்.
பற்று போடுதல்:
சைனஸ் காரணமாக கடுமையான தலைவலி அல்லது வீக்கம் இருந்தால், நொச்சி இலைகளை சிறிது தண்ணீருடன் சேர்த்து கெட்டியான விழுதாக அரைக்கவும். இதனுடன் கால் டீஸ்பூன் காய்ந்த இஞ்சி தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, நெற்றியின் இருபுறமும் பற்று போல தடவவும்.
இதை ஒரு வாரம் தடவுவதன் மூலம் தலைவலி மற்றும் வீக்கம் குறையும். இந்த பற்று காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் துடைத்து எடுக்கவும்.
ஒத்தடம் கொடுத்தல்:
ஒரு கைப்பிடி நொச்சி இலைகளை இரண்டு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து, இரும்பு கடாயில் நன்கு வதக்கவும். வதக்கிய இலைகள் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்போது, அவற்றை ஒரு சுத்தமான பருத்தி துணிக்குள் வைத்து, ஒரு முடிச்சு போல கட்டி, வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்கவும்.