Tamil Serial News: சினிமாவையும், சொந்த வாழ்க்கையையும் பேலன்ஸ் செய்யும் நடிகைகள் வெகு சிலர் தான். நிறைய நடிகைகள் சினிமாவை விட்டு திருமண பந்தத்தில் இணைந்து, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள். சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் அப்படிபட்ட பிரபலங்கள் உள்ளார்கள். இதில் நடிகை மதுமிலாவும் ஒருவர். சின்னத்திரையில் ஆஃபிஸ் என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிளா.
கணவர் மற்றும் குழந்தையுடன் மதுமிளா
திருமணம் ஆனதும் சினிமா பக்கமே வராமல் இருந்தார். அண்மையில் அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியல் ரசிகர்காள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது செம்பருத்தி தொடரில் நடித்து வரும் கார்த்திக் அதன் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ஸ்ருதி ராஜ் நடித்திருந்தார். ஜீ தமிழ் சத்யா சீரியல் நாயகன் விஷ்ணுவுக்கு அதில் ஜோடியாக நடித்திருந்தார் மதுமிளா.
மதுமிளாவின் ஆறு மாத குழந்தை
இந்த தொடருக்கு முன்பாகவே மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் மது. இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர், ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் இருந்து வந்தார். பின்னர் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.
மதுமிளா
ஆபிஸ் தொடருக்கு பின்னர் தாயுமானவன், அக்னி பறவை போன்ற தொடர்களில் நடித்து வந்தார். இவரது சிறப்பான நடிப்பாலும் அழகான தோற்றத்திலும் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
கணவருடன்...
முதன் முதலில் விஷால் நடித்த பூஜை படத்தில் விஷாலின் தங்கையாக நடித்தார் மதுமிளா. அதன் பின்னர் ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை சிங்கம், போன்ற பல படங்களில் தோன்றினார். குடும்பப் பாங்கான கதா பாத்திரத்தில் நடித்த மது, நிஜத்தில் படு மார்டன் பெண்.
மார்டன் மதுமிளா
இவருக்கு குவாரண்டைன் காலத்தில் குழந்தை பிறந்து, தற்போது ஆறு மாதம் ஆகியிருக்கிறது. குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் படமெடுத்து, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் மதுமிளா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”