New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/10/sabarimalatemple-759.jpg)
ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.
ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நாளை (செப்.13) திறக்கப்படும் என தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். விசேஷ நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜை செய்யப்படும்.
அந்த நாட்களில் பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து செல்வர். அந்த வகையில் கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (செப்.13) திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு திருவோண நட்சத்திர பூஜை உள்ளிட்டவை நடக்கிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் செப் 15, 16-ம் தேதிகளில் சிறப்பு விருந்து வழங்கப்படவுள்ளது. சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள sabarimala.org.in. மூலம் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.