கொத்தமல்லி நாம் தினமும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். இந்நிலையில் இதில் வைட்டமின் ஏ, சி, கே உள்ளது. கோவிட் 19 தொற்று பாதிப்பிலிருந்து மீள கொத்தமல்லி கலந்த தண்ணீரை குடிக்க வேண்டும் என்று அப்போது கூறப்பட்டது.
இந்த தண்ணீரை குடித்தால், ஆர்த்ரைடிஸ் வலியை குணப்படுத்தும். உடலில் உள்ள ஈரப்பதத்தை போக்கும். சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளை நீக்கும். இது உடலை நன்றாக குளுமைப்படுத்தும். இதனால் சூடு தனியும். முகம் வீங்கி இருப்பதை குறைக்கும்.
தினமும் 1 முதல் 2 கப் கொத்தமல்லி கலந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இந்நிலையில் இதை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை, 2 கப் தண்ணீரில் சேர்க்க வேண்டும் . இதை கொதிக்க வைக்க வேண்டும். பாதி அளவிற்கு இது மாறும் . அப்போது அதை வடிகட்டி, அந்த தண்ணீரை நாம் குடிக்கலாம். இந்நிலையில் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதை குடிக்க கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“