வெங்காயம், பூண்டு தோலை இனி தூக்கி போடாதீங்க... மல்லிகைப் 'பூ' கணக்கில்லாமல் பூக்க இப்படி செய்யுங்க!

மல்லிகை பூ என்பது தமிழ்மகளிரின் அழகை உயர்த்தும் ஒரு முக்கிய அடையாளம். புடவை, நகைகள் அனைத்தையும் விட மல்லிகை பூவின் மணமும் அழகும் ஒப்பற்றது.

மல்லிகை பூ என்பது தமிழ்மகளிரின் அழகை உயர்த்தும் ஒரு முக்கிய அடையாளம். புடவை, நகைகள் அனைத்தையும் விட மல்லிகை பூவின் மணமும் அழகும் ஒப்பற்றது.

author-image
Mona Pachake
New Update
download (89)

வீட்டுத் தோட்டங்களில் செடிகளை ஆரோக்கியமாக வளர்க்க பலரும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சமையலறையில் சாதாரணமாக தூக்கி எறியப்படும் பொருளான வெங்காயத் தோல் செடிகளுக்கு ஒரு சிறந்த இயற்கை மூலிகை உரமாக இருப்பதை பல தோட்ட நிபுணர்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, மல்லிகைச் செடிக்கு இது ஒரு சக்திவாய்ந்த வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது.

Advertisment

வெங்காயத் தோலில் உள்ள சக்தி:

பெரிய வெங்காயத் தோலில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, அயோடின், சல்பர் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை செடிகளின் தண்டு, இலை மற்றும் அரும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. மேலும், பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கவும் உதவுகின்றன.

மல்லிகைச் செடிக்கான சிறந்த உரம்:

மல்லிகை பூ என்பது தமிழ்மகளிரின் அழகை உயர்த்தும் ஒரு முக்கிய அடையாளம். புடவை, நகைகள் அனைத்தையும் விட மல்லிகை பூவின் மணமும் அழகும் ஒப்பற்றது. மல்லிகை செடியில் அதிக அரும்புகள் பிடித்து, பூக்கள் சுலபமாக பூக்க, சரியான உரம் வழங்குவது அவசியம். வெங்காயத் தோல் தண்ணீர் இதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது.

வெங்காயத் தோல் உரம் தயாரிக்கும் முறை:

  • ஒரு டப்பாவில் ஒரு கைப்பிடி அளவு வெங்காயத் தோலை போடவும்.
  • அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
  • ஒரு நாள் கழித்து, அந்த தண்ணீர் காபி கலரில் மாறும்.
  • அதை ஒரு துணி மூலமாக வடிகட்டவும்.
  • வாரத்தில் ஒரு முறை அந்த தண்ணீரை மல்லிகை மற்றும் பிற செடிகளுக்கு ஊற்றவும்.
Advertisment
Advertisements

இதனால் கிடைக்கும் நன்மைகள்:

  • தண்டு வளர்ச்சி வேகமாகும்.
  • செடிகளின் வேர்கள் வலுவாகும்.
  • பூக்கள் அதிக அளவில் மலரும்.
  • மண்ணின் சத்துகள் நீண்ட நேரம் நீடிக்கும்.
  • பூச்சி தாக்குதல் குறையும்.

தோட்ட நிபுணர்கள் கூறுவது:

வெங்காயத் தோல் ஒரு இயற்கையான ‘மூடாக்காப்’ உரம். இதை பயன்படுத்துவதன் மூலம் ரசாயன உரங்களின் தேவையை குறைத்து, செடிகளின் இயற்கை வளர்ச்சியை ஊக்குவிக்கலாம் என தோட்ட பராமரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை முறையில் செடிகளை வளர்ப்பது சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. சமையலறை கழிவுகளை சிறப்பாக பயன்படுத்தி மல்லிகை உள்ளிட்ட அனைத்து மலர் செடிகளுக்கும் சிறந்த ஊட்டச்சத்தை வழங்குவது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு சிறந்த படியாக கருதப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: