/indian-express-tamil/media/media_files/2025/05/06/JfWEEmIoM2OFfyofWE6N.jpg)
சிங்கங்கள் காட்டிற்கே ராஜாவாக இருக்கலாம். ஆனால், அவற்றுக்கும் போட்டியாளர்கள் இல்லாமல் இல்லை. திறமையான வேட்டையாடிகளாக அறியப்படும் அவை, உணவுச் சங்கிலியின் உச்சியில் கம்பீரமாக அமர்ந்திருக்கின்றன. ஆனால், ராஜாக்களுக்கும் சவால்கள் உண்டு.
வனத்தை பொறுத்தவரை, சில சமயங்களில் சிங்கத்தையே வீழ்த்தும் ஆற்றல் பெற்ற விலங்குகளும், பறவைகளும் இருக்கின்றன. சில சமயத்தில் இவை தற்காப்பிற்காக நிகழ்கின்றன. இது மட்டுமின்றி, தனது பகுதியை பாதுகாப்பதற்காகவும் இந்த தாக்குதல் நிகழ்கிறது.
சிங்கத்தை வீழ்த்திய சில விலங்குகளின் பட்டியல் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் எதிர்பாராத சில விலங்குகள் மற்றும் பறவைகளும் அடங்கும்.
1. மற்ற சிங்கங்கள்:
சிங்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மற்றொரு சிங்கம் தான். உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் இது தான் உண்மை. கூட்டத்தின் ஆதிக்கத்திற்காக ஆண் சிங்கங்களுக்கு இடையே நடக்கும் சண்டைகள் கொடூரமானவை. ஒரு புதிய ஆண் சிங்கம், ஆளும் ராஜாவை சவால் விடும்போது, அந்தப் போர்கள் மரணத்தை விளைவிக்கக்கூடியவை. உண்மையில், இந்த சண்டைகள் மரணத்தில் முடிவது அசாதாரணமானது அல்ல. இதில் சிங்கக் குட்டிகளும் கொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த கூட்டங்களுக்கு இடையேயான சண்டைகள் சிங்கங்களின் சமூக கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். மேலும், இயற்கைத் தேர்வின் செயல்பாடாகும்.
2. கழுதைப்புலிகள் (கூட்டமாக):
கழுதைப்புலிகள் பெரும்பாலும் பிணந்தின்னி விலங்குகளாக மட்டுமே பார்க்கப்படுகின்றன, ஆனால், அவை திறமையாக வேட்டையாடும். மேலும், கூட்டமாக இருக்கும்போது கழுதைப்புலிகள் மிகவும் பாதுகாப்பானவை. ஒரு தனி கழுதைப்புலி, ஒரு சிங்கத்திற்கு எதிராக நிற்க முடியாது. ஆனால் ஒரு டஜன் கழுதைப்புலிகள்? அதன் கதையே வேறு விதமாக இருக்கும்.
சிங்கங்களும், கழுதைப்புலிகளும் மோதிக்கொள்ளும்போது - குறிப்பாக ஒரு இரையை கைப்பற்றுவதற்காக - விஷயங்கள் மோசமாகலாம். சாதகமான சூழ்நிலையில், கழுதைப்புலிகள் சிங்கங்களுக்கு மரணத்தை விளைவிக்கும் காயங்களை ஏற்படுத்தியுள்ளன.
நேஷனல் ஜியோகிராஃபிக், கழுதைப்புலிகள் தங்கள் பிரதேசத்தை வெற்றிகரமாக பாதுகாத்த பல மோதல்களை ஆவணப்படுத்தியுள்ளது.
3. ஆப்பிரிக்க யானைகள்:
பெரும்பாலான சிங்கங்கள் யானைகளுடன் மோதாமல் இருக்க போதுமான புத்திசாலித்தனம் கொண்டவை. ஆனால் எப்போதாவது பசியுள்ள ஒரு சிங்கக் கூட்டம் ஒரு யானைக்குட்டியைத் தாக்கக்கூடும். அப்போதுதான் பிரச்சனை தொடங்குகிறது.
முழுமையாக வளர்ந்த யானை மிகுந்த வலிமை பொருந்தியதாக இருக்கும். யானைகளின் உருவம், தொட முடியாததாக ஆக்குகிறது. சிங்கங்களை மிதித்தும், தேவைப்பட்டால் தந்தங்களால் குத்தியும் யானைகள் கொல்லும்.
4. ஆப்பிரிக்க எருமைகள்:
எருமைகள் பார்ப்பதற்கு மெதுவாகவும், சாதுவாகவும் தோன்றலாம். ஆனால் அவை வலிமையானவை. அவை, ஆப்பிரிக்காவில் "கருப்பு மரணம்" என்று அழைக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இருக்கிறது.
ஆப்பிரிக்க எருமைகள் கூட்டமாகப் பயணிக்கின்றன. அப்போது ஒன்று தாக்கப்பட்டால், மற்றவை பெரும்பாலும் அதை பாதுகாக்க ஒன்று சேர்கின்றன. எருமைகள், சிங்கங்களை கொம்புகளால் குத்தி கொன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
5. நீர்யானை:
நீர்யானைகள் இறைச்சி உண்பதில்லை, ஆனால், அவை திகிலூட்டும் கடியின் சக்தியைக் கொண்டுள்ளன. பெரிய தாடைகளால், அவை நொடிகளில் எலும்புகளை நொறுக்க முடியும். அவை மிகவும் ஆக்ரோஷமானவை. குறிப்பாக தண்ணீரில், அவை மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றன.
6. முதலைகள்:
ஆற்றுப் பகுதிகளில், சிங்கங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக முதலைகள் உள்ளன. தண்ணீர் பருகும் போது பதுங்கியிருக்கும் முதலைக்கு, சிங்கங்கள் இரையாகலாம். அவற்றின் திடீர் தாக்குதல்களில் இருந்து தப்பிப்பது, கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
7. கருப்பு காண்டாமிருகங்கள்:
காண்டாமிருகங்கள் பொதுவாக சண்டையிடுவதை விரும்புவதில்லை. ஆனால், அவை பின்வாங்கவும் செய்யாது. குறிப்பாக கருப்பு காண்டாமிருகங்கள், வெள்ளை காண்டாமிருகங்களை விட மிகவும் ஆக்ரோஷமானவை. பெரிய கொம்பு மற்றும் தாக்கும் சக்தியுடன், அவை சீண்டப்பட்டால் ஒரு சிங்கத்தை எளிதில் கொல்ல முடியும். மோதல்கள் அரிதாக இருந்தாலும், அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பொதுவாக காண்டாமிருகமே வெற்றி பெறுகிறது.
8. நெருப்புக்கோழிகள்:
இதைக் கேட்பதற்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், நெருப்புக்கோழிகள் ஆபத்தானவை. இந்த பெரிய பறவைகளால் பறக்க முடியாது. எனினும், அவை காற்றைப் போல வேகமாக ஓடவும், எலும்புகளை உடைக்கும் சக்தியுடன் உதைக்கவும் முடியும். ஒரு நெருப்புக்கோழியின் சக்திவாய்ந்த கால்கள், சிங்கங்கள் உட்பட சிறிய வேட்டையாடிகளை கொல்ல முடியும்.
பிரிட்டானிக்காவின் கூற்றுப்படி, நெருப்புக்கோழியின் உதைகள் மரணத்தை விளைவித்ததாக அறியப்படுகிறது.
9. வல்லூறு:
முழுமையாக வளர்ந்த சிங்கம் இந்த வல்லூறுகளிடமிருந்து பாதுகாப்பாக இருந்தாலும், சிங்கக் குட்டிகள் வேறு கதை. வல்லூறுகள் ஆறு அடிக்கு மேல் இறக்கைகளை கொண்டுள்ளன. மேலும், கவனக்குறைவான குட்டிகளைப் பிடிக்க அவை தாழ்வாகப் பறக்கும். உச்ச வேட்டையாடிகளின் குட்டிகள் கூட காட்டு உலகின் ஆபத்துகளிலிருந்து விடுபடவில்லை என்பதை இது உணர்த்துகிறது.
நேஷனல் ஜியோகிராஃபிக், இந்த கழுகுகளின் தனித்துவமான வேட்டை பழக்கங்களைப் பற்றி செய்தி வெளியிட்டது. இதில் இளம் சிங்கங்களை வேட்டையாடுவதும் அடங்கும்.
10. மனிதர்கள்:
உண்மையான உணவுச் சங்கிலியின் உச்சியில் இருப்பது மனிதர்கள் தான். வாழ்விட இழப்பு, வேட்டை மற்றும் மனித - விலங்கு மோதல் மூலம் மனிதர்கள் நீண்ட காலமாக சிங்கங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். சிங்கங்களுக்கு பல இயற்கையான எதிரிகள் இல்லையென்றாலும், மனிதர்கள் தொடர்ந்து மிகவும் நிலையான ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.