அழகை பராமரிக்கும் முறை என்று வரும்போது, நாம் முகம் மற்றும் கைகளைத்தான் அதிகமாக பார்த்துகொள்வோம். இந்நிலையில் நாம் அதிக கவனிக்காமல் இருப்பது பாதங்களை. இந்நிலையில் நாம் ஆரஞ்சு தோலை வைத்து செய்யும் ஸ்கிரபை பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு தோளில் இயற்கையான விஷயங்கள் பல உள்ளது. இது பாதத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். இதனால் இது சருமத்தை மிரதுவாக்கும். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டான வைட்டமின் சி, இவை சருமத்தை சேதப்படுத்தும் விஷயங்களுக்கு எதிராக போராடுகிறது. உங்கள் பாதம் வரட்சியடையாமல், இளமையாக இருக்கும்.
இதில் உள்ள சிட்டிரிக் ஆசிட் உங்கள் சமருத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். சிறிது வெள்ளையாக நிறம் மாறும்.
இந்த ஸ்கிரப் செய்ய தேவையான பொருட்கள். 1 கப் காய்ந்த ஆரஞ்சு தோல், ½ கப் சுகர் அல்லது உப்பு , ¼ கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்.
ஆரஞ்சு தோலை அரைத்து, அதில் உப்பு, தேங்காய் எண்ணெய் சேத்து பேஸ்டாக மாற்றி பாதங்களில் போடவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். மிதமான சூடான நீரில் காலை கழுவவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“