இப்படி ஒரு முறை பாதாம் சேமியா பாயாசம் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஊறவைத்த 20 பாதாம்
தண்ணீர்
2 ஸ்பூன் நெய்
அரை கப் ஜவ்வரிசி
அரை கப் சேமியா
அரை லிட்டர் பால்
1 ஒரு கப் நாட்டு சர்க்கரை
முந்திரி 6
திராட்சை 7
செய்முறை: இரவு முழுவதும் பாதாமை ஊற வைத்து , தோலை நீக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். இனியொரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, ஜவ்வரிசி , சேமியா சேர்த்து வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். தொடர்ந்து இந்த பாத்திரத்தில் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.இனியொரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரை , தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். கொதிக்கும் பாலில் ஜவ்வரிசி, சேமியா சேர்க்கவும். தொடர்ந்து பாதாம் அரைத்ததை சேர்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து, பாகை சேர்க்கவும், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளரவும். சூப்பரான பாதாம்- சேமியா பாயாசம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“