வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்ளும் பழக்கம் உங்களுக்கு உண்டா? இன்று உங்கள் முதுகு வலிக்கு, நேற்று கால்கள், முந்தைய நாள் உங்கள் தலைவலிக்கு.
அதற்காக நீங்கள் ஒவ்வொரு நாளும் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்று அர்த்தமல்ல.
டாக்டர் சஞ்சய் குப்தாவின் கூற்றுப்படி, இரண்டு வகையான வலி நிவாரணிகள் உள்ளன, ஒன்று பாராசிட்டமால் அடிப்படையிலானவை மற்றும் NSAIDகள் அல்லது ஸ்டீராய்டு அல்லாத (diclofenac, sodium, ibuprofen, profen, aceclofenac) அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.
இந்த வலிநிவாரணிகள் எளிதில் கிடைக்கலாம் ஆனால் அவற்றை உட்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
டாக்டர் குப்தாவின் கூற்றுப்படி, தினசரி 1 கிராம்க்கு மேல் 3-4 மாதங்களுக்கு, பாராசிட்டமால் உட்கொள்வது கடுமையான கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.
1 கிராம் பாராசிட்டமால் NSAID களைப் போல அதிக தீங்கு விளைவிக்காது என்றாலும், நீங்கள் நீண்ட காலத்திற்கு அதை சாப்பிடக்கூடாது, என்று அவர் விளக்குகிறார்.
NSAID களைப் பொறுத்தவரை, அவை கல்லீரல் காயம், கடுமையான இரைப்பை அழற்சி, இரைப்பை புண்கள், நிரந்தர சிறுநீரக பாதிப்பு போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறுகிறார். அவை உங்கள் உணவுக்குழாயின் கீழ் முனையையும் சிதைக்கலாம்.
இரண்டு வாரங்களுக்கும் மேலாக NSAID களை உட்கொள்வது நிரந்தர சிறுநீரக சேதத்திற்கு வழிவகுக்கும், என்று அவர் விளக்குகிறார்.
இந்தப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்ன?
கல்லீரல் நச்சுத்தன்மை
உங்கள் கல்லீரல் இருக்கும் இடத்தில் உங்கள் வலது விலா எலும்புக்குக் கீழே கடுமையான வலியை அனுபவிப்பீர்கள் என்று டாக்டர் குப்தா விளக்குகிறார்.
கல்லீரல் செயல்பாடு சோதனையில் கல்லீரல் நொதிகள் மற்றும் பிலிரூபின் liver (enzymes and bilirubin) உயரும், என்று அவர் கூறுகிறார்.
ரத்தம் மெலிதல்
கல்லீரல் செயல்பாடு குறைவதால், ரத்தம் உறைவது பாதிக்கும்.
கல்லீரல் ரத்தம் உறைதல் காரணியை வெளியிடுகிறது, அதன் குறைபாடு காரணமாக தன்னிச்சையான ரத்தப்போக்கு ஏற்படலாம். இது ஒரு நபருக்கு ரத்தப்போக்குக்கு வழிவகுக்கும், என்று டாக்டர் குப்தா கூறுகிறார்.
சேதமடைந்த சிறுநீரக செயல்பாடு
உங்கள் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு இயல்பை விட குறைவான அளவு சிறுநீர் வெளியாகும்.
உடல் வீக்கம், நடக்கும்போது மூச்சுத் திணறல் போன்றவை இதன் மற்ற எச்சரிக்கை அறிகுறிகளாகும்.
கடுமையான இரைப்பை அழற்சி
இரைப்பை அழற்சி மற்றும் இரைப்பை புண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு, உங்கள் வயிற்றில் வலி மற்றும் அசௌகரியம், இருமல் போன்றவற்றை அனுபவிப்பீர்கள். தீவிர நிகழ்வுகளில், நீங்கள் இருமும்போது ரத்தமும் இருக்கலாம் என்று டாக்டர் குப்தா விளக்குகிறார்.
நீங்கள் ரத்தத்தை வாந்தியெடுத்தால், உங்களுக்கு உடனடியாக மருத்துவ கவனிப்பு தேவை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.