இப்படி பலா கொட்டையில் காரக் குழம்பு செய்து பாருங்க. செம்ம ருசியா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பலா கொட்டை – 1 கப்
நல்லெண்ணை – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – ½ டேபிள் ஸ்பூன்
சீரகம் – ½ டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
பூண்டு – 15
சின்ன வெங்காயம் – 20
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு
தக்காளி 1
மஞ்சள் பொடி -1/4 டீஸ்பூன்
மிளகாய் பொடி- அரை டீஸ்பூன்
மிளகு பொடி – 1 டேபிள் ஸ்பூன்
மல்லிப் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை அளவு புலி
சாம்பார் பொடி – ½ ஸ்பூன்
செய்முறை : பலா கொட்டைகளை தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு எடுக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு சீரகம், வெந்தயம் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். நிறம் மாறியதும், அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, மிளகு பொடி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அவித்த பலா கொட்டைகளை சேர்க்கவும். தொடர்ந்து வதக்கவும். இதில் புலி கரைசலை சேர்க்கவும். தொடர்ந்து கொதிக்க வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து, சாம்பார் பொடி சேர்த்து கிளர வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“