/tamil-ie/media/media_files/uploads/2023/04/New-Project61.jpg)
சுவையான பன்னீர் புலாவ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் – 250 கிராம்
சாதம் – 2 கப்
தக்காளி-1
வெங்காயம்- 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய்- தலா 2
பிரியாணி இலை – 1
பச்சை மிளகாய் – 4
நெய் – 1டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும். அடுத்து இதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை மிளகாய், சிறிதளவு புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். இப்போது பன்னீர் துண்டுகளை சதுரமாக நறுக்கி சேர்க்கவும். மசாலா ரெடி ஆனதும் சமைத்த வைத்த சூடான சாதத்தை போட்டு மிதமான தீயில் கிளறவும். கடைசியாக மீதியுள்ள புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான கம கம பன்னீர் புலாவ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.