Advertisment

92 வருடங்களுக்குப் பிறகு பங்குனி உத்திரம் நாளில் சந்திர கிரகணம்: என்ன விசேஷம்? வழிபாட்டு முறை எப்படி?

பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நன்னாளாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய சிறப்பு மிக்க பங்குனி உத்திரம் நாளில், சந்திர கிரகணமும் வருகிறது.

author-image
WebDesk
New Update
panguni uthiram lunar eclipse

பங்குனி உத்திரம் நாளில், சந்திர கிரகணமும் வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நன்னாளாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய சிறப்பு மிக்க பங்குனி உத்திரம் நாளில், சந்திர கிரகணமும் வருகிறது. இந்த பங்குனி உத்திரத்தின் விசேஷம் என்ன, எப்படி வழிபாடு செய்வது என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள். 

Advertisment

இந்த ஆண்டு பங்குனி உத்திரம் சிறப்பைப் பற்றி பார்ப்போம்: “பங்குனி உத்திரம் நாள் என்பது  தெய்வங்களுக்கு எல்லாம் திருமணம் நடக்கக்கூடிய ஒரு நன்னாள். இந்த ஆண்டு 25.3.2024 திங்கள்கிழமை அன்று வரக்கூடிய பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால், இந்த பங்குனி உத்திரம் அன்று சந்திர கிரகணம் வருகிறது. இப்படி, 92 வருடங்களுக்குப் பிறகு பங்குனி உத்திரம் நாளில் சந்திர கிரகணம் வருகிறது. ராகு கேதுவினுடைய சுழற்சி 18 வருடங்கள். ஆகும், 18 வருடங்களுக்கு முன்பு இதே மீனம் கன்னி ராசியில் ராகு கேது அமர்ந்திருந்தார்கள்.

இந்தப் பங்குனி உத்திரத்தின் சிறப்பு என்னவென்றால் 92 ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனி உத்திரம் நாளில் சந்திர கிரகணம் வருகிறது என்பதுதான். சந்திர கிரகணம் என்றால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து நிற்கும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்படி வரக்கூடிய இந்த சந்திர கிரகணம் 25.03.2024 திங்கள்கிழ்மி 4 மணி நேரம் 36 நிமிடங்கள் நீடிக்க உள்ளது. இந்த சந்திர கிரகணம் திங்கள் கிழமை காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 3.02 மணி வரை நீடிக்கும். இந்த சந்திர கிரகணம் எந்தப் பகுதி இரவாக இருக்கிறதோ, அந்த பகுதியில் நன்றாக தெரியும், நமக்கு திங்கள்கிழமை சந்திர கிரகணம் நிகழும் நேரம் பகல் பொழுது என்பதால் நமக்கு சந்திர கிரகணம் பார்வைக்கு தெரியாது.

இருப்பினும், இந்த ஆண்டு பங்குனி உத்திரம் நன்னாளில் வருகிற சந்திர கிரகணம் ஒரு சிறப்பான நாள். ஏனென்றால், வட மாநிலங்களில் பங்குனி உத்திரம் அன்றுதான் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

கிரகண காலகட்டங்களில் செய்யக்கூடிய வழிபாடுகள் மந்திர முழக்கங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த சந்திர கிரகணம் மிக நீண்ட சந்திர கிரகணமாக உள்ளது.

பங்குனி உத்திரம் அன்று வரும் சந்திர கிரகணம் நாளில், யாருக்கெல்லாம் திருமணம் ஆகவில்லையோ அவர்கள் எல்லாம் இந்த நன்னாளில் விளக்கு ஏற்றி வைத்தால் திருமணம் கைகூடும், விரைவில் திருமணம் நடக்கும். எந்த தோஷங்கள் இருந்தாலும் திருமணம் கைகூடும். தெய்வங்களுக்கெல்லாம் திருமணம் நடந்த நடக்கக்கூடிய நாளில் முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரமான பங்குனி உத்திரம் நட்சத்திர நன்னாளில் மனமுருக வேண்டினால், வேண்டுவது உடனே நடக்கும் என்பது நம்பிக்கை.

அதேபோல, பங்குனி உத்திரமும் சந்திர கிரகணமும் ஹோலி பண்டிகையும் சேர்ந்து வரும் நாளில் முதன்மைக் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டிக்கொண்டு அவருக்கு விளக்கேற்றினால் நல்ல பலன் கிடைக்கும். அதனால், கிட்டத்தட்ட 92 வருடங்களுக்குப் பிறகு வரும் சந்திர கிரகணத்துடன் வரக்கூடிய பங்குனி உத்திரம் நாளில் இஷ்ட தெய்வங்களை வழிபாடு செய்யுங்கள். தெய்வ அனுகூலங்கள் கிடைக்கும், குலதெய்வ கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள். அப்படி ஏற்றப்படும் விளக்குகள் இரண்டு விளக்குகளாக இருக்க வேண்டும். அப்படி விளக்கேற்றப்படும் போது, இதுவரை திருமணம் கைகூடாமல் இருந்த உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் நடக்கும்.

அதனால், திங்கள்கிழமை சந்திர கிரகணத்துடன் வரக்கூடிய பங்குனி உத்திரம் நான்னாளில் தெய்வங்களுக்கு விளக்கேற்றி பலன் பெறுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lunar Eclipse panguni uthiram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment