Advertisment

கடந்த கால நினைவுகளுடன், டெல்லியில் பிரிவினை அருங்காட்சியகம் திறப்பு

இந்தியப் பிரிவினையை நினைவுகூரும் குடியிருப்புகள், ரயில்கள், அகதி முகாம்கள் உள்ளிட்ட பலவற்றின் முக்கியப் புகைப்படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

author-image
WebDesk
New Update
Delhi

With keepsakes from the past, Partition Museum opens to visitors

டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் உள்ள தாரா ஷிகோ நூலகத்தில் பிரிவினை அருங்காட்சியகம் (Partition Museum) வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

Advertisment

நாடு பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இடம்பெயர்ந்தனர். பிரிவினையின்போது எல்லைப் பகுதிகளில் கலவரம் உருவாகி சுமார் 10 லட்சம் உயிரிழப்பும் ஏற்பட்டது.

இதை நினைவு கூரும் வகையில் டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழக வளாகத்தில் பிரிவினை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

1947 ஆகஸ்ட் 14-ல் நம் நாட்டிலிருந்து பிரிந்தது பாகிஸ்தான் மட்டுமல்ல. அரசியல் காரணங்களுக்காக நடந்த இந்த பிரிவினையால் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான உறவுகளும் பிரிந்தன.

இப்பிரிவினையில், குறைந்த பட்சமாக 6 மாதங்களில் 10 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்த அளவுக்கு வேறு எங்கும் நிகழவில்லை என கூறப்படுகிறது.

இந்தியப் பிரிவினையை நினைவுகூரும் குடியிருப்புகள், ரயில்கள், அகதி முகாம்கள் உள்ளிட்ட பலவற்றின் முக்கியப் புகைப்படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

அப்போதைய முக்கிய கடிதங்கள், சான்றிதழ்கள், துணிகள், ஆங்கிலேயர்களுக்கு 1942-ல் கைகளால் தயாரித்து அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் போன்றவையும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, கல்வி அமைச்சர் அதிஷி கூறியதாவது: நான் பிரிவினையில் இருந்து தப்பிய குடும்பத்தில் இருந்து வந்தவன். என் தாத்தா இந்திய அரசாங்கத்தில் எழுத்தராக பணிபுரிந்தார், அவர்  கடைசி வரை பாகிஸ்தானில் தனது பெற்றோருடன் தங்க வேண்டியிருந்தது... எனது பூட்டி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டார், ஆனால் அது முடியவில்லை... அதில் உயிர் பிழைத்தவர்கள் இல்லை... இது ஒரு தெய்வ ஆசிர்வாதம் ஆகும்.

சமூகக் கட்டமைப்பை வெறுப்புடன் அழிப்பது மிகவும் எளிதானது, ஆனால் அந்த காயங்களை ஆற்றுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும்… சிலரின் சொந்த நலன்கள் நம் நாட்டின் சமூகக் கட்டமைப்பை உடைத்துவிட்டன, இன்று வரை லட்சக்கணக்கான குடும்பங்கள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளன, என்று அவர் மேலும் கூறினார்.

பிரிவினை அருங்காட்சியகத்தின் தனிச்சிறப்பு அது வரலாற்றைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல் மக்களை கடந்த காலத்துடன் இணைக்கிறது.

இந்நூலகம் நகரின் பல்வேறு அம்சங்கள் மற்றும் அதன் வரலாறு பற்றிய கண்காட்சிகளுடன் ஒரு கலாச்சார மையமாகவும் செயல்படும்.

இந்த அருங்காட்சியகம் பிரிவினையின் நினைவுகளை மக்கள் அனுபவிக்கும் வகையில் சித்தரிக்க முயற்சிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரிவினைக்கு பிறகு டெல்லியில் புதிதாக லாஜ்பத் நகர், சி.ஆர்.பார்க், பஞ்சாபி பாக் ஆகியவை உருவாகின. இந்த அருங்காட்சியகத்தில் பிரிவினை மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் அம்சங்களை விளக்கும் வகையில் ஏழு கேலரிஸ் இடம்பெறும்.

ரயில் பெட்டிகள், பழங்கால ஹவேலிகள் மற்றும் அகதிகள் முகாம்களின் பிரதிகள் போன்றவற்றைக் காண்பது பலருக்கு கண் திறக்கும் அனுபவமாக இருக்கும், இந்த அருங்காட்சியகத்தில் சிந்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு காட்சியகம் உள்ளது.

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் ‘அடாப்ட் எ ஹெரிடேஜ்’ திட்டத்தின் கீழ் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

கசிவு கூரைகள் மற்றும் ஈரமான சுவர்கள் போன்ற சிக்கல்களைக் கொண்டிருந்த கட்டிடம், டெல்லி அரசாங்கத்தால் மீட்டெடுக்கப்பட்டது. இது அதன் காலனித்துவ மற்றும் முகலாய கடந்த காலத்தின் சில பகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

1600 களில் முகலாய பேரரசர் ஷாஜகானின் மகன் தாரா ஷிகோவின் நூலக கட்டிடமாக இருந்த இந்த இடம், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் அரசு உயரதிகாரி டேவிட் ஓக்டர்லோனி குடியிருப்பாக மாறியது.

பிறகு, பள்ளி, பாலிடெக்னிக் என மாறி கடைசியில் டெல்லி மாநில தொல்பொருள் ஆய்வு அலுவலகமாக செயல்பட்டு வந்தது. இதையே தற்போது அருங்காட்சியகமாக டெல்லி அரசு மாற்றி உள்ளது.

பிரிவினை தொடர்பான ஓர் அருங்காட்சியகம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸிலும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment