* சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடலை பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறிய பிறகு அதில் காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்(நெய்சாக அரைக்க கூடாது இல்லை என்றால் உருண்டை இருகி விடும்).
* பெரிய வெங்காயத்தை(பாதி) பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்த்து உருண்டையாக தட்டவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சிவக்க வதக்கிய பிறகு அதில் தக்காளி ஒன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆற விடவும்.
* நன்றாக ஆறியவுடன் சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸ்யில் அரைக்கவும்.
* அரைத்த கலவையை புளி தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* மற்றொரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பூண்டு, மீதியுள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
* பிறகு சாம்பார் தூளையும் சேர்த்து வதக்கவும் (சாம்பார் தூளுக்கு பதில் மிளகாயும், மல்லி தூளும் சேர்க்கலாம்) குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போடவும். உருண்டை முக்கால் பதம் வெந்ததும் கரைத்து வைத்திற்கும் மசாலா புளிக்கலவையை சேர்க்கவும். உருண்டைகளை திருப்பி விட்டு மேலும் 5 நிமிடம் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil