பருத்தி பால் பாயாசம் ஒரு முறை செய்து பாருங்க, செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பருத்தி விதைகள் – 50 கிராம்
1.5 கப் தண்ணீர்
ஜவ்வரிசி கால் கப்
½ கப் வெல்லம்
ஒரு கையளவு தேங்காய் துண்டுகள்
3 ஏலக்காய்
காய்ந்த இஞ்சி 1 துண்டு
1 ஸ்பூன் நெய்
முந்திரி
திராட்சைகள்
செய்முறை : பருத்தி விதைகளை நன்றாக கழுவ வேண்டும். இதை தண்ணீர் சேர்த்து 8 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து 1.5 கப் தண்ணீர் சேர்த்து, ஊற வைத்த பருத்தியை அரைத்துகொள்ளவும். இதை வடிகட்டி முதல் பால் எடுத்துகொள்ளவும். மீண்டும் அரைத்ததை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்து அதையும் வடிகட்டி 2ம் பால் எடுத்துகொள்ளவும். இது இரண்டையும் கலந்து ரெடி செய்து வைத்துகொள்ளவும்.
தொடர்ந்து ஜவ்வரிசியை ஊற வைக்கவும். 2 மணி நேரம் ஊற வைத்ததும், தண்ணீருடன் பாத்திரத்தில் சேர்க்கவும். நன்றாக கிளர வேண்டும். இது வெந்ததும், பருத்தி பாலை சேர்த்து கொள்ளவும். வெல்லம் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து ஒரு மிக்ஸியில் தேங்காய், ஏலக்காய்கள் அரைத்ததை இதில் சேர்க்கவும். தொடர்ந்து நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சைகளை சேர்க்கவும்.