பாரம்பரியத்தின் புதிய அடையாளம்: மதுரையில் உருவாகும் நிரந்தர ஓவியக் கலைக்கூடம்

மரபு ஆர்வலர்கள் மற்றும் கலாசார ஆர்வலர்களிடையே இந்த நிரந்தர கலைக்கூடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

மரபு ஆர்வலர்கள் மற்றும் கலாசார ஆர்வலர்களிடையே இந்த நிரந்தர கலைக்கூடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madurai

Madurai

மதுரை காமராஜர் சாலை - தெப்பக்குளம் இடையே அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் ஒரு பகுதியாக அன்றில் சித்திரம் கூடம்என்ற நிரந்தர ஓவியக் கலைக்கூடம் உருவாகியுள்ளது. மதுரையின் தொன்மைகளையும் தமிழர் பாரம்பரியங்களையும் கலை வடிவில் உயிர்ப்பிக்க, தன்னார்வலர்கள் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, மதுரையின் புதிய அடையாளமாக மாறியுள்ளது.

Advertisment

வரலாற்று சிறப்புமிக்க நகரமாக மதுரை ஓங்கிக் காணப்படுகிறது. இந்நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற மலைப்பகுதிகள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் மற்றும் தொன்மைக் கதைகளால் அலங்கரிக்கப்படுகின்றன. குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம், இன்றும் சிறந்த கலைக்கூடமாக திகழ்கிறது.

Madurai

இந்தச் செய்தியில் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கைவினைப் பாணியில் வரையப்பட்ட ஓவியங்களாகும். பொதுமக்கள் இலவசமாக இவற்றைக் காண அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நேரடியாக ஓவியங்கள் வரையும் வசதியும் இங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

Madurai

Madurai

Madurai

மரபு ஆர்வலர்கள் மற்றும் கலாசார ஆர்வலர்களிடையே இந்த நிரந்தர கலைக்கூடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. மதுரையின் பாரம்பரிய பண்பாட்டு தொடர்ச்சியை வலியுறுத்தும் இந்நிறுவனம், எதிர்காலத்துக்கு ஒரு கலாசாரச் சின்னமாகும் என நம்பப்படுகிறது.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: