முகத்தில் முடி வளர்வது என்பது ஆண்களுக்கு சாதாரணமாக இருந்தாலும், பெண்களுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகும். ஹார்மோன் சமநிலையின்மை, மரபியல் காரணிகள், சில மருந்துகள் அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) போன்ற மருத்துவ நிலைகள் முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சிக்கு காரணமாக அமையலாம்.
Advertisment
முகத்தில் உள்ள தேவையற்ற முடியை அகற்றுவதற்கு பல வழிகள் உள்ளன.
இந்த வீடியோவில், முகத்தில், குறிப்பாக மேல் உதடு மற்றும் கன்னங்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்கான ஒரு சிறப்பான வீட்டு வைத்தியத்தை அனிதா குப்புசாமி பகிர்ந்து கொண்டார்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்
சமையல் மஞ்சள் தூள்: நம் பாரம்பரிய மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மஞ்சள், அதன் அற்புதமான மருத்துவ குணங்களுக்காகப் பெயர் பெற்றது. இது கிருமி நாசினி மட்டுமல்லாமல், சரும அழகை மேம்படுத்தும் ஆற்றலையும் கொண்டது.
பால் அல்லது பால் க்ரீம்: மஞ்சள் தூளுடன் சேர்ந்து சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவும் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர்.
எப்படி பயன்படுத்துவது?
மஞ்சள் தூளுடன் தேவையான அளவு பாலைச் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் மென்மையான விழுதாகக் கலக்கவும். இந்த விழுதை, தேவையற்ற முடி உள்ள பகுதிகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விடவும்.
குறிப்பு:
ஹார்மோன் சமநிலையின்மையால் கன்னம் மற்றும் தாடைப் பகுதிகளில் வளரும் முடிகளை நீக்க, இந்த முறையைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டும்.
வறண்ட சருமத்தினருக்கான குறிப்பு
உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், பாலுக்குப் பதிலாக பால் க்ரீமை பயன்படுத்தலாம். இது சருமத்திற்குத் தேவையான கூடுதல் ஈரப்பதத்தை அளித்து, வறட்சியைத் தடுக்கும்.