பிஸ்தாவில் நாம் நினைப்பதை விட அதிக நன்மை இருக்கிறது. இதில் ஆரோகியமான கொழுப்பு சத்து, புரத சத்து, நார்சத்து உள்ளது. இதில் மோனோசாச்சுரேடட் கொழுப்பு சத்து உள்ளது. இந்நிலையில் இவை இதயத்தை காப்பாற்றும் கொழுப்பு சத்து. கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். மேலும் இதில் லுடியின், சியான்தினின் உள்ளது. இவை இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.
இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் இருப்பதால் சுகர் பேஷண்ட்ஸ் இதை சாப்பிடலாம். இதில் உள்ள புரத சத்து மற்றும் நார்சத்து ரத்தத்தில் உள்ள சுகர் மற்றும் இன்சுலின் அளவை சீராக வைத்துகொள்ள உதவும்.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்டான லுடியின், சியான்தினின் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை ஏற்படுத்தும். வயதாவதால் ஏற்படும் கண் பிரச்சனைகளை குறைக்கும். கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கும்.
பிஸ்தாவில் நார்சத்து உள்ளது. இவை ஜீரணத்தை குணமாக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துகொள்ளும்.
இதில் வைட்டமின் பி6, தைமைன், பாஸ்பரஸ் உள்ளது. மேலும் இதில் மெக்னீஷியம், பொட்டாசியம் உள்ளது. இவை உடலில் உள்ள பல்வேறு செயல்பாடுகளுக்காக உதவுகிறது.
மேலும் இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் இ உடலை சேதத்திலிருந்து பாதுகாக்கும். தீவிர நோய் ஏற்படாமல் தடுக்கும். இந்நிலையில் இதை நாம் அளவாக சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
இந்நிலையில் ஒரு நாளைக்கு 25 கிராம் வரை மட்டுமே பிஸ்தா எடுத்துகொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“