/indian-express-tamil/media/media_files/2025/01/01/xfUkJh1ttaTBVVfU6Yx9.jpg)
புதுச்சேரியில் கோலாகலமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் அரங்கேறின. இதில் திரளானோர் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
2024-ஆம் ஆண்டு முடிந்து 2025-ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி, உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. குறிப்பாக, புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று மகிழ்ந்தனர்.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரை சாலையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
புத்தாண்டை கொண்டாட வந்த அனைவரும் ஒன்றிணைந்து உற்சாகமக நடனமாடினர். நள்ளிரவு 12 மணிக்கு புதிய வருடம் பிறந்ததும், பட்டாசுகள் வெடித்து, ஹேப்பி நியூ இயர் என கோஷங்களை எழுப்பி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
இதேபோல் புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் பலர் கலந்து கொண்டனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமலிருக்க ஆயரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.