/tamil-ie/media/media_files/uploads/2019/01/merina-3-14.jpg)
Pongal 2019
கோலங்கள் தனிக்கவனம் பெறுவது மார்கழி மாதத்தில்தான். வழக்கமாக தினமும் போடும் கோலத்தை விட மார்கழியில் கோலம் போடுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பறைசாற்றுவதில் கோலத்திற்கும் பங்குண்டு. மார்கழி முதல் தை மாதம் வரை வீடுகள் முன்பு பிரமாண்ட கோலமிட்டு சூரிய பகவானை வரவேற்பார்கள்.
இந்த மார்க்கழி மாதத்தில் இருக்கும் மற்றொரு சிறப்பு என்னவென்றால் தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை இந்த மாதத்தில் தான் வரும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் மஞ்சள், அரக்கு.குங்குமம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கலர்களில் கோலப்பொடிகளின் விற்பனை தமிழகத்தில் களைக்கட்டியுள்ளது.
இந்த வருடம் கோலம் வகைகளுக்கு பஞ்சமில்லி. ரங்கோலி கோலம், சிக்கு கோலம், பூக்கோலம், தண்ணீர் கோலம், 3 டி கோலம், மயில் கோலம், தேர் கோலம், சங்கு கோலம், கத்திரிக்காய் கோலம், ரோஜா கோலம் என பல விதங்களில் இருந்தாலும் பச்சரிசி மாவை கொண்டு மாக்கோலம் போடுவதுதான் சிறந்தது.
கோலத்தின் நடுவே பூசணிப்பூவை வைப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. அது மங்களத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. சரி இந்த பொங்களுக்கு என்ன கோலம் போடலாம்? எப்படியெல்லாம் வாசலை அழகுப்படுத்தலாம்? அப்படினு யோசிக்கிறீர்களா? கவலைய விடங்க
4 நாட்களும் நச்சுனு போடறமாறி கோலம் வகைகள் இதோ உங்களுக்காக
1. கரும்பு கோலம்:
2. பொங்கல் கோலம்
3. விளக்கு கோலம்:
4. பெரிய பானை கோலம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.