/indian-express-tamil/media/media_files/2025/01/12/ONCRqMFE2n9rpqU1Byhp.jpg)
2025 பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் அறுவடை திருவிழாவின் ஒரு வடிவமாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அறுவடை காலத்தில் இயற்கை செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா அமைந்துள்ளது.
பொங்கல் என்றால் அரிசி, கரும்பு மற்றும் பிற தானியங்கள் அறுவடை செய்யப்படும் பருவத்தைக் குறிக்கிறது. இது செழிப்பின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் அன்று, பெண்கள் வீட்டின் நுழைவாயிலில் கோலம் வரைதல் உட்பட பல பூஜைகள் செய்யப்படுகின்றன, மேலும் பல போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
கோலம் என்பது தென்னிந்தியாவில் காணப்படும் ஒரு சிறப்பு வகை ரங்கோலி ஆகும். கோலம் போடுவது கடினமாகத் தோன்றினாலும் சில பயிற்சிகளால் மனதைக் கவரும் வண்ணமயமான ரங்கோலிகளாக உருவாக்க முடியும். கோலம் வரைய வண்ண பொடிகள், மலர்களால் பயன்படுத்தப்படுகிறது.
அப்படி இந்த 2025 பொங்கலுக்கு வாசலை அழகாக்க அழகிய ரங்கோலி கோலங்கல் எப்படி போடுவது என்று பார்ப்போம்.
எளிமையாக கலர் கோல மாவுகளை வைத்து வீட்டு வாசலில் போடலாம். வாசல் சின்னதாக இருப்பவர்கள் இந்த மாதிரியான கோலத்தை போடலாம். இந்த மாதிரியான கோலங்கள் போடுவதற்கு குறைந்த நிறங்களே தேவைப்படும்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இந்த கோலத்தை முயற்சி செய்யலாம். இதை போட்டி நேரங்களில் போடலாம். பெரிய வாசலில் போடும் போது நல்ல தெளிவாகவும் இருக்கும். கிராமங்களில் பெரிய வாசல் வைத்து இருப்பவர்கள் இந்த கோலத்தை ட்ரை பண்ணலாம்.
பூக்கோலம் இதை முற்றத்தில் அல்லது பொங்கல் வைக்கும் இடங்களில் போடலாம். பொங்கல் வைக்கும் போது குடும்பத்தினரை உற்சாகமாக வைத்து கொள்ள உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.