Advertisment

உறவுகளால் கைவிடப்பட்ட முதியவர்களுடன் பொங்கல் விழா - சமூக அமைப்பின் செயலுக்கு குவியும் பாராட்டு

கோவையில், முதியோர் இல்லத்தில் விமரிசையாக பொங்கல் விழா நடைபெற்றது. இதில், ஆதரவற்றோர் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

author-image
WebDesk
New Update
Old age home celebration

கோவை மாவட்டம், காரமடை பகுதியில் 'நாங்களும் இருக்கிறோம்' சமூக அமைப்பு சார்பில் ஆனந்தம் முதியோர் காப்பகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

Advertisment

 

Old age home celebration 1

 

Advertisment
Advertisement

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை தினத்தின் போது ஆதரவற்ற மக்களை சந்தித்து அவர்களுடன் கொண்டாடுவதை இந்த அமைப்பு வழக்கமாக கொண்டுள்ளது. அதனடிப்படையில், இந்த ஆண்டில் உறவினர்களால் கைவிடப்பட்ட முதியோர்கள் பராமரிக்கப்படும் இல்லத்திற்கு வருகை தந்து பொங்கல் கொண்டாடினர்.

 

Old age home celebration 2

 

இதனால், காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் முதியோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழாவின் போது அனைவரும் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

Old age home celebration 3

 

நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் இணைந்து பண்டிகைகளை கொண்டாடும் சூழலில், இவ்வாறு ஆதரவற்றவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பொங்கல் கொண்டாடிய சமூக அமைப்புக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

செய்தி - பி.ரஹ்மான் 

Happy Pongal Pongal Gift
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment