/indian-express-tamil/media/media_files/2025/01/14/dGNiQ3jNN0FqcdBezE7a.jpg)
கோவை மாவட்டம், காரமடை பகுதியில் 'நாங்களும் இருக்கிறோம்' சமூக அமைப்பு சார்பில் ஆனந்தம் முதியோர் காப்பகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை தினத்தின் போது ஆதரவற்ற மக்களை சந்தித்து அவர்களுடன் கொண்டாடுவதை இந்த அமைப்பு வழக்கமாக கொண்டுள்ளது. அதனடிப்படையில், இந்த ஆண்டில் உறவினர்களால் கைவிடப்பட்ட முதியோர்கள் பராமரிக்கப்படும் இல்லத்திற்கு வருகை தந்து பொங்கல் கொண்டாடினர்.
இதனால், காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் முதியோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழாவின் போது அனைவரும் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் இணைந்து பண்டிகைகளை கொண்டாடும் சூழலில், இவ்வாறு ஆதரவற்றவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பொங்கல் கொண்டாடிய சமூக அமைப்புக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
செய்தி - பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.