/indian-express-tamil/media/media_files/2025/01/13/ny6uGF2ftlVhcPG8298j.jpg)
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜன.14-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படும். இந்த முறையும் அதே போன்று கொண்டாடப்பட உள்ளது. போகி பண்டிகை தொடங்கி திருவள்ளுவர் தினம் வரை பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்பபடும்.
உழவு தொழிலில் அறுவடை முடிந்து அந்த நெல்லில் அரிசி எடுத்து அதில் பொங்கல் வைத்து சாமிக்கு படைக்கும் இந்த திருநாள் தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. பொங்கல் அன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாண்டை அணிந்து கோயில் சென்று வழிபட்டு வீடுகளில் பொங்கல் வைத்து மகிழ்வர்.
சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் வைப்பர். அதே நேரம் வீடுகளில் வண்ண மலர்களால் அலங்கரிப்பர். வாசல்களில் வண்ண கோலமிடுவர். அந்த வகையில் இந்த முறை பொங்கலுக்கு பொங்கல் பானை கோலமிட்டு மகிழுங்கள். ஈஸியாக 4 புள்ளிகளில் பொங்கல் பானை, கரும்பு கோலமிடலாம். அதை வண்ண கலர் பொடிகள் கொண்டு அலங்கரிக்கலாம். கோலம் போடத் தெரியாதவர்களும் இதைக் கற்று கொண்டு போடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.