pongal sambar ven pongal sambar recipe : வெண்பொங்கலுக்கு எந்த சாம்பார் நன்றாக இருக்கும் என்று கூறுங்கள் .
Advertisment
இனி பொங்கலுக்கு என்ன வைப்பது என்று யோசிக்க வேண்டாம். பொங்கலுக்கு மேலும் சுவையை கூட்டுவது சாம்பார் தான்....
தேவையான பொருள்கள்
கேரட் - 2
கத்தரிக்காய் - 1
அவரைக்காய் - 5
உருளைக்கிழங்கு - 1
குடை மிளகாய் - 1
தக்காளி - 1
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெந்தயம் - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 1
கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க
சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - 1 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2 , தனியா - 3 ஸ்பூன் ஆகியவை வறுத்து அரைக்க தனியாக எடுத்து கொள்ளவும்.
பொங்கல் ஸ்பெஷல் சாம்பர் செய்முறை:
குக்கரில் துவரம்பருப்புடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பருப்பை குழைய வேக வைத்து மசித்து பின் எடுக்கவும். புளியைக் கரைத்து தனியாக வைக்கவும். வறுத்து, பொடிக்க வேண்டியதை பொடித்து வைக்கவும்.
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, வெந்தயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
அத்துடன் காய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் உப்பைப் புளிக்கரைசலில் சேர்த்துக் கொட்டி கொதிக்க விடவும். கொதிக்கும் போது சாம்பார் தூளை சேர்க்கவும்.
புளியின் பச்சை வாசனை போனவுடன், பருப்பை சேர்த்து ஒரு கொதி விடவும். இறக்கி வைக்கும் முன் கொத்த மல்லி இலை சேர்த்து இறக்கவும் . சுவையான சாம்பார் ரெடி.