Advertisment

பொங்கலுக்கு வாங்குன மஞ்சளை தோசைக் கல்லில் வைத்து… அட சூப்பர் டிப்ஸா இருக்கே!

மஞ்சள் கொத்து வைத்து ஹெல்தி ரெசிபி செய்வது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Turme

பொங்கல் மஞ்சள் கொத்து வாங்கி இருப்போம். அதை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தால் இந்த டிப்ஸ் பாருங்க. இதை வைத்து ரெசிபி கூட செய்யயலாம். 

Advertisment

மஞ்சள் கொத்தில் இருந்து இலைகளை நறுக்கி மஞ்சள் மட்டும் எடுக்கவும். இப்போது இதை அப்படியே தண்ணீர் போட்டு சுத்தம் செய்து எடுக்கவும். அதை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அடுத்தாக தோலை சீவி கொள்ளவும். தோல் தனியாகவும், மஞ்சள் தனியாகவும் எடுத்துக் கொள்ளவும். 

மஞ்சள் மட்டும் எடுத்து அதை அரை துருவிக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் மஞ்சளை போட்டு அதோடு கேரட்டையும் துருவி சேர்க்கவும். அதில் ஒன்றரை டம்ளர் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். சிறிது நெய் சேர்த்து அப்படியே அதை அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். லோ ஃப்ளேமில் வைத்து சூடு பண்ணவும்.

இப்போது கொதி வரும். நன்கு கொதி விட்டு கலர் மாறி வந்ததும் அடுப்பை ஆஃப் செய்யவும். சூடு ஆறிய பின் வடிக்கட்டி எடுக்கவும். கண்ணாடி பாத்திரத்தில் போட்டு 1 வருடம் வரை பயன்படுத்தலாம். கண்ணில் கருவலையம், டீ டேன், கை, கால்களில் கருமை நீங்க இதை பயன்படுத்தலாம்.

Advertisment
Advertisement

அடுத்தாக, தோசை கல் அடுப்பில் வைத்து  லோ ஃப்ளேமில் வைக்கவும். முன்னர் சொன்னது போல் மஞ்சள் கொத்தை தோல் சீவி துருவிக் கொள்ளவும். இதை தோசை கல்லில் வைத்து லேசாக வதக்கவும். அதை எடுத்து ஆறிய பின் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும். இது இன்யூனிட்டி குறைவாக உள்ளவர்களக்கு நல்லது. இரவில் தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில்  1 பின்ச் அளவு இந்த மஞ்சள் சேர்த்து குடிக்கலாம். குறிப்பாக குழந்தைகள் இதை குடிக்கலாம். இன்யூனிட்டி லெவல்  அதிகரிக்க உதவும். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment