புளித்த இட்லி மாவுடன் இதை சேருங்க… பூஜை பொருட்கள் தங்கம் போல் ஜொலிக்கும்!

பூஜை பொருட்களை எவ்வாறு எளிதாக சுத்தப்படுத்துவது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் பழைய பூஜை பொருட்கள் கூட புதிது போன்று ஜொலிக்கும்.

பூஜை பொருட்களை எவ்வாறு எளிதாக சுத்தப்படுத்துவது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் பழைய பூஜை பொருட்கள் கூட புதிது போன்று ஜொலிக்கும்.

author-image
WebDesk
New Update
Pooja vessels cleaning

வீட்டில் இருக்கும் மற்ற பொருட்களை சுத்தப்படுத்துவது போன்று பூஜைப் பொருட்களை எளிதாக கழுவ முடியாது. ஏனெனில், இதில் நாள்பட்ட எண்ணெய் பிசுக்குகள் நிறைந்து காணப்படும். மேலும், இவற்றை அதிகமாக அழுத்தம் கொடுத்தும் தேய்த்துக் கழுவ முடியாது.

Advertisment

ஏனெனில், இத்தகைய பூஜை பாத்திரங்களில் அதிகப்படியான வேலைப்பாடுகள் நிறைந்திருக்கும். இதனால், பூஜைப் பாத்திரங்களை எவ்வாறு சுலபமாக கழுவலாம் என்று இணையத்தில் தேடி இருப்போம்.

இதற்காக மொத்தம் மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதுமானதாக இருக்கும். அந்த வகையில், சீவக்காய், மஞ்சள் தூள் மற்றும் புளித்த இட்லி மாவு ஆகியவற்றின் மூலம் பழைய பூஜை பொருட்களை புதியது போன்று நாம் மாற்றலாம்.

ஒரு சிறிய பாத்திரத்தில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு ஸ்பூன் சீவக்காய், இரண்டு ஸ்பூன் புளித்த இட்லி மாவு ஆகிய அனைத்தையும் சேர்த்து கலக்க வேண்டும்.

Advertisment
Advertisements

இதனைக் கொண்டு பூஜை பாத்திரங்கள் மீது நன்றாக தேய்க்க வேண்டும். இதையடுத்து சுமார் 5 நிமிடங்கள் கழித்து பாத்திரம் தேய்க்கும் சோப்பு போட்டு அவற்றை தேய்க்க வேண்டும். இறுதியாக, தண்ணீரில் கழுவி எடுத்தால் பூஜை பொருட்கள் அனைத்தும் புதிது போன்று ஜொலிக்கும்.

நன்றி - Nalini Manick Cooking Youtube Channel

Kitchen Hacks In Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: