அரைத்துவிட்ட பூண்டு குழம்பு இப்படி செய்யுங்க. செம்ம ருசியாக இருக்கும். இதை 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் எண்ணெய்
15 பூண்டு
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் மிளகு
5 சின்ன வெங்காயம்
அரை ஸ்பூன் வெந்தயம்
ஒரு கொத்து கருவேப்பிலை
3 தக்காளி
5 ஸ்பூன் எண்ணெய்
கடுகு
வெந்தயம்
கருவேப்பிலை
சின்ன வெங்காயம் 10
பூண்டு ஒரு கைபிடி
1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
50 எம்.எல். புளி கரைசல்
1 டம்ளர் தண்ணீர்
உப்பு தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் சீரகம், வெந்தயம், மிளகு , பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதக்கியதுடன், தக்காளியை சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, வெந்தயம் சேர்க்கவும். தொடர்ந்து அதில் வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்துகொள்ள வேண்டும். இதை நன்றாக வதக்க வேண்டும். நிறம் மாறியதும் அரைத்த விழுந்தை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தொடர்ந்து அதில் புளி கரைத்ததை ஊற்றவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்க்கவும். குழம்பு கொதித்ததும் இறக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“