poovaiyar super singer poovaiyar instagram super singer
poovaiyar super singer poovaiyar instagram super singer : விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பல நடிகருக்கு பாட்டு பாடி வருகிறார்.
Advertisment
கிராமத்தில் கானா பாடல் பாடிக்கொண்டிருந்த பூவையார் என்கிற நபீஸ் சங்கீதம் முறைப்படி கற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு பைனல் வரை சென்றார். அத்துடன் இவருக்கு பிகில் திரைப்படத்தில் பாடியதுடன் நடித்தார். அதனை தொடர்ந்து ஆதி தனது பாடல் ஆல்பம் அல்லது திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு பூவையாருக்கு கொடுப்பதாக கூறினார்.
இந்த நிலையில் மேடை நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என இவர் பிஸியாகி விட்டார். இவ்வளவு எளிதாக பூவையார் இந்த இடத்திற்கு வந்துவிடவில்லை. படிக்க வேண்டிய வயதில் தந்தை இழந்த குடும்பத்தின் கஷ்டத்தைஏற்றுக் கொண்டு கானா பாடல் பாடி அம்மாவுக்கு உதவியாக இருந்தார்.
சென்னை தான் பூவையாரின் பூர்வீகம். இவன் சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தூடுவாடி என்னும் பகுதியைச் சேர்ந்த சிறுவன். அவருடைய வயது 13. இவர் தன்னுடைய 8 வயதிலிருந்தே கானா பாடல்கள் பாடி வருகிறார். இவருடைய இயற்பெயர் பூவையார். ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
பூவையார் பிறந்து சிறிது காலத்திலேயே அவருடைய தந்தை இறந்து விட்டார். அன்று முதல் அவருடைய தாயார் பள்ளியில் சத்துணவுப் பணியாளராக வேலை செய்து தான் கப்பீஸின் அக்காவையும் கப்பீஸையும் காப்பாற்றி வந்தார்.
தன்னுடைய முதல் நாள் நிகழ்ச்சியிலேயே அம்மாவைப் பற்றிய பாடல் ஒன்றைப் பாடி அனைவரையும் எழுந்து நின்று ஆரவாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். இவர் சென்னையின் பிரபல கானா பிரபலங்களான கானா சுதாகர், கனா மணி, கானா யோகேஷ் ஆகியோருடைய உதவியால் தன்னுடைய ஆறு வயதில் இருந்தே மேடை நிகழ்ச்சிகளில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று கானா பாடல் பாடி வருகிறார்.
ரசிகர்கள் இவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சின்ன வயதிலேயே சினிமாவில் உள்ள பல பிரபலங்களின் மத்தியில் இவ்ளோ!!! பெரிய வாய்ப்பா என்று ரசிகர்கள் பூவையாருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil