குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர் போன்ற ரெசிபிகள் மிகவும் பிடிக்கும். இருப்பினும் கடையில் கெமிக்கல் அல்லது வேறு பொருட்கள் சேர்ப்பர் என்பதால் பலரும் வாங்கித் தர மறுப்பர். இந்த நிலையில், வீட்டிலேயே சிறந்த முறையில் உருளைக் கிழங்கு வைத்து பீட்சா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மைதா- 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கு
ரவை - 1/4 கப்
தக்காளி - 2 கப்
வெங்காயம் - 2
குடைமிளகாய் - கால் கப்
முந்திரிப் பருப்பு - 2 ஸ்பூன்
துருவிய சீஸ் - 1 கப்
உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - கால் கப்
வெண்ணெய் - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 250 கிராம்
பச்சை மிளகாய் சாஸ் - 1 ஸ்பூன்
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, மிளகுத் தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக் கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு கலந்து வைக்கவும். தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு தேய்த்து காய்ந்ததும் மாவை கனமான தோசையாக செய்து வைத்து , அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித் தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்ததால் யம்மி பீட்சா ரெடி. தேவைப்பட்டால் கூட சாஸ் வைத்து சுவையாக பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“