செம்பருத்தி செடி நன்றாக பூத்துக் குலுங்குவதற்கு பசுமை தோட்டக்கலை (@PasumaiThottakalai) என்ற யூடியூப் சேனலில் சூப்பரான ஒரு டிப்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
உங்களுடைய வீட்டில் செம்பருத்தி செடி இருக்கிறதா, இருக்கிறது என்றால், வாரம் ஒருமுறை பால் ஊத்துங்க, செம்பருத்தி செடி பூத்துக் குலுங்கும் பாருங்கள்.
Advertisment
செம்பருத்தி செடி நன்றாக பூத்துக் குலுங்குவதற்கு பசுமை தோட்டக்கலை (@PasumaiThottakalai) என்ற யூடியூப் சேனலில் சூப்பரான ஒரு டிப்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
செம்பருத்தி அழகானது மட்டுமல்ல மருத்துவக் குணம் மிக்கது. உங்கள் வீட்டில் செம்பருத்தி செடி இருக்கிறது என்றால், அந்த செம்பருத்தி செடியில் மொட்டுகள் உதிர்கிறது என்றால் அதற்கு கால்சியம் பற்றாக்குறை இருப்பதே காரணம். அதனால், கால்சியம் பற்றாக்குறையை ஈடுகட்ட, ஒரு டம்ப்ளர் பாலை 4 டம்பளர் தண்ணீரில் கலந்து செம்பருத்தி செடிகளுக்கு வாரத்துக்கு ஒருமுறை ஊற்றுங்கள், உங்கள் வீட்டு செம்பருத்தி செடிகளில் மொட்டுகள் உதிரவே உதிராது. செம்பருத்தி செடி பூத்துக் குலுக்கும்.
Advertisment
Advertisements
அதே போல, நர்சரியில் இருக்கும் செடிகள் மட்டும் ரொம்ப பசுமையாக இருக்கிறதே எப்படி என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. நீங்கள் நர்சரியில் போய் கேட்டால், சிலர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சொல்வார்கள், ஆனால், பலரும் சொல்ல மாட்டார்கள். நர்சரியில் செடிகள் பசுமையாக இருப்பதற்கு காரணம், நர்சரியில் செடிகளுக்கு டி.ஏ.பி உரம் இடப்படுகிறது. இந்த டி.ஏ.பி உரத்தை ஒரு செடிக்கு குறைந்தபட்சம் 20-30 டி.ஏ.பி பால்கள் போட வேண்டும். இந்த டி.ஏ.பி உரம் போட்டதும் மறக்காமல் தண்ணீர் ஊற்ற வேண்டும். இப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை டி.ஏ.பி உரம் இட வேண்டும்” என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.