Advertisment

குறைப்பிரசவம் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடம்: புதிய ஆய்வில் வெளிவந்த உண்மை

ஒட்டுமொத்தமாக, கடந்த தசாப்தங்களில் உலகில் எந்தப் பகுதியிலும் குறைப்பிரசவம் விகிதம் மாறவில்லை என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.

author-image
WebDesk
New Update
lifestyle

Pre term births in India

ஒவ்வொரு இரண்டு வினாடிக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒரு குழந்தை இறக்கிறது.

Advertisment

செவ்வாயன்று ஐக்கிய நாடுகளின் முகவர்கள் மற்றும் பங்குதாரர்கள் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் அனைத்து குறைப்பிரசவங்களில் (கர்ப்பத்தின் 37 வது வாரத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்) கிட்டத்தட்ட பாதி இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய ஐந்து நாடுகளில் நிகழ்ந்தன.

உலகெங்கிலும் குறைப்பிரசவங்களில் பிறந்த குழந்தைகளில் 45 சதவீதத்தை அவர்கள் ஒன்றாகக் கணக்கிட்டனர், இது அதிக இறப்பு அபாயத்தை வெளிப்படுத்துகிறது. இது குழந்தைகளின் உயிர் மற்றும் ஆரோக்கியத்திற்கான "அமைதியான அவசரநிலை" என்பதைக் குறிக்கிறது.

2020 இல் 13.4 மில்லியன் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குழந்தைகள் சிக்கல்களால் இறக்கின்றனர்.

Born too Soon: Decade of Action on Pre-term Birth  என்ற அறிக்கையின்படி இது 10 குழந்தைகளில் ஒன்றுக்கு சமம்.

2020 ஆம் ஆண்டில், பங்களாதேஷில் மிக அதிகமாக மதிப்பிடப்பட்ட குறை பிரசவம் விகிதம் இருந்தது (16.2 சதவீதம்), அதைத் தொடர்ந்து மலாவி (14.5 சதவீதம்) மற்றும் பாகிஸ்தான் (14.4 சதவீதம்) நாடுகள் உள்ளன.

இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும், தலா 13 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது, இவை அதிக குறை பிரசவம் விகிதங்களைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இருந்தது.

இந்த பட்டியலில் 30.16 லட்சம் குழந்தைகளுடன் இந்தியா முதலிடத்திலும், தொடர்ந்து பாகிஸ்தான் (9.14 லட்சம்), நைஜீரியா (7.74 லட்சம்), சீனா (7.52 லட்சம்) இருப்பதால், ஐந்து நாடுகளின் மொத்த குறைப்பிரசவ விகிதம் உண்மையில் ஆபத்தானவை. இந்த அறிக்கையில் WHO மற்றும் UNICEF இன் புதுப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் உள்ளன.

publive-image

இந்தியாவில் குறைப்பிரசவங்களுக்கு என்ன காரணம்?

புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்புக்கான உள்கட்டமைப்பு மிகவும் விரிவானதாகவும், கடைக்கோடி வரை இருக்க வேண்டும் என்பது இந்த ஆய்வில் தெளிவாகிறது.

டாக்டர் சுரேந்தர் சிங் பிஷ்ட் இந்த கண்டுபிடிப்புகளை விளக்கி கூறுகையில், கிராமப்புறங்களில், சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் இல்லாதது பற்றிய பொதுவான புகார் உள்ளது, ஆனால் சிறப்புப் பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவுகள், மேம்படுத்தப்பட்ட பிரசவ அறைகள் மற்றும் திறமையான பிரசவங்கள் போன்ற முன்முயற்சிகள் பல முன்கூட்டிய குழந்தைகளைக் காப்பாற்ற உதவியுள்ளன. ஆனால் அவை இன்னும் வளரவில்லை.

India Newborn Action Plan மற்றும் ராஷ்ட்ரிய பால் சுரக்ஷா காரியக்ரம் போன்ற பல திட்டங்களை அரசாங்கம் தொடங்கியுள்ளது மற்றும் நாடு முழுவதும் பல சிறப்புப் பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவுகளை (SNCU) அமைத்துள்ளது.

டாக்டர் V C மனோஜ் கூறுகையில் வாழ்க்கைமுறை மாற்றங்கள், நாள்பட்ட நோய்கள் மற்றும் IVF கர்ப்பம் போன்ற பல காரணிகள் நகர்ப்புற மையங்களில் முன்கூட்டிய பிறப்புகளுடன் தொடர்புடையது என்றார்.

இதை ஒப்புக்கொண்ட டாக்டர் பிஷ்ட் குறைந்துவிட்ட கருத்தரிப்பு நிலைகள் மற்றும் நவீன கர்த்தரிப்பு சிகிச்சியிலும் குறை பிரசவங்களின் ஆபத்து இல்லாமல் இல்லை.

இந்தியாவில் குறை பிரசவங்களின் பிராந்திய வாரியான பிரிவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி PloS-Global Public Health இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, மேற்கு வங்கத்தில் 16 சதவிகிதம், தமிழ்நாட்டில் 14 சதவிகிதம் மற்றும் குஜராத்தில் 9 சதவிகிதம் பிறந்ததாகக் கூறியது.

ஒட்டுமொத்தமாக, கடந்த தசாப்தங்களில் உலகில் எந்தப் பகுதியிலும் குறைப்பிரசவம் விகிதம் மாறவில்லை என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. உலகளாவிய குறைப்பிரசவம் விகிதம் 2020 இல் 9.9 சதவீதமாக இருந்தது, இது 2010 இல் 9.8 சதவீதமாக இருந்தது.

அதிக பாதிப்பான பகுதிகளான தெற்கு ஆசியாவில் 2010 இல் 13.3 சதவீதம் மற்றும் 2020 இல் 13.2 சதவீதம், மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 2010 மற்றும் 2020 இரண்டிலும் 10.1 சதவீதம் உட்பட, எந்த பிராந்தியத்திலும் குறைப்பிரசவம் விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.

உண்மையில், இந்த இரண்டு பிராந்தியங்களும் கூட்டாக உலகளவில் 65 சதவீத குறைப்பிரசவங்களுக்கு காரணமாகின்றன.

ஒரு வெபினாரில், டாக்டர் அன்ஷு பானர்ஜி, ஆபத்துகளை அடையாளம் காணவும் நிர்வகிக்கவும் மற்றும் குறைப்பிரசவம் நிகழாமல் தவிர்க்கவும் கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் தரமான சுகாதார சேவைகளை ஒவ்வொரு பெண்ணும் அணுக வேண்டும் என்றார்.

டாக்டர் சச்சின் ஷா கருத்துப்படி, புதிதாகப் பிறந்த சிறப்புப் பராமரிப்புப் பிரிவுகளில் தரமான பராமரிப்பை ஊக்குவிப்பதும், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு பராமரிக்க தாய்மார்களுக்குப் பயிற்சி அளிப்பதும் முக்கியம். இது முக்கியமாக தாயுடன் தாயுடன் நீடித்த பிணைப்பு மற்றும் அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதைக் குறிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment