கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். இதன் போது அவள் உணவு, உடற்பயிற்சி மற்றும் தோல் பராமரிப்பு வரை தன்னை மிகவும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒன்பது மாதங்களில், வளர்ந்த வயிறு காரணமாக, சில பெண்களுக்கு சில நிலைகளில் உட்கார சிரமமாக இருக்கலாம். அதுபோல, கர்ப்பிணிகள் தரையில் எப்போதும் போல சம்மணங்கால் போட்டு உட்காரலாமா? இது நல்லதா? அதற்கு பதிலளித்த டாக்டர் தீப்தி ஜம்மி இன்ஸ்டாகிராமில் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.
இதை ஒப்புக்கொண்ட டாக்டர் வைஷாலி ஷர்மா, சம்மணங்கால் போட்டு உட்காருவதால் ஏற்படும் சில நன்மைகளைப் பகிர்ந்து கொண்டார்:
Advertisment
Advertisements
இது இரைப்பை குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவும். சம்மணங்கால் நிலையில் அமரும் போது, கணுக்கால் உள் தொடையின் தமனிக்கு எதிராக அழுத்துகிறது, இதன் விளைவாக இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய அதிக வேலை செய்கிறது. இது இரண்டு கால்களிலும் உள்ள தமனிகளைத் திறக்க உதவுகிறது.
இது பெரும்பாலும் கவனம் செலுத்தாத இடுப்பு மூட்டுகளுக்கு நல்லது.
உள் உறுப்புகளும் அதிக இரத்தத்தைப் பெறுகின்றன, இது அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
ஆனால் பிஜிபி (pelvic girdle pain) மற்றும் எஸ்பிடி (symphysis pubis dysfunction) ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு இப்படி உட்கார்ந்து கொள்வது பரிந்துரைக்கப்படவில்லை என்று டாக்டர் சவுத்ரி எச்சரித்தார்.
ஏனெனில், கால்களை ஊன்றி உட்காருவது இடுப்பை சமச்சீரற்ற நிலையில் வைக்கிறது, இது கால்களில் எடையின் சீரற்ற விநியோகத்தை ஏற்படுத்தும், இது அசௌகரியத்துக்கு வழிவகுக்கும். நீண்ட நேரம் சம்மணங்கால் இட்டு உட்கார்ந்திருப்பது கால்கள் மற்றும் கணுக்கால்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது, இதனால் சுழற்சியை கட்டுப்படுத்துகிறது மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், எந்த நிலையிலும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் முதுகில் சிரமத்தை ஏற்படுத்தும், என்று அவர் கூறினார்.
உங்கள் வயிறு வளரும் போது, நீங்கள் தரையில் உட்காருவது அல்லது உட்கார்ந்த நிலையில் இருந்து எழுவது சங்கடமாக இருக்கும். இந்த கட்டத்தில் வசதியாக நாற்காலிக்கு மாறுவது சிறந்தது. உங்கள் பிரசவத்திற்குப் பிறகு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சம்மணங்கால் போட்டு அமரலாம் என்று, டாக்டர் சவுத்ரி குறிப்பிட்டார்.
சம்மணங்கால் போட்டு உட்காருவதற்குப் பதிலாக, உங்கள் இதயம் மற்றும் உடலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாத மாற்று பொசிஷனுக்கு மாறலாம். டெய்லர் சிட்டிங் நிலை அப்படிப்பட்ட ஒன்று.
டெய்லர் சிட்டிங் பொசிஷனில் அமருவது எப்படி?
*தரையில் உட்கார்ந்து படத்தில் உள்ளபடி உங்கள் இரு பாதங்களையும் சேர்த்து அமருங்கள். நீங்கள் வசதியாக இருக்கும் வரை இந்த நிலையில் இருக்கலாம்.
டாக்டர் ஷர்மாவின் கூற்றுப்படி,
*இது உடலின் நடுப்பகுதியில் சுழற்சியை மேம்படுத்துவதோடு முதுகுவலியை குறைக்க உதவுகிறது.
*இந்த தோரணையானது கருப்பையை மேல்நோக்கி நகர்த்தவும், அதன் மூலம் உங்கள் கரு/குழந்தை தங்களை மிகவும் சாதகமான நிலையில் நகர்த்துவதற்கு கூடுதல் அசைவுகளை வழங்கவும் உதவுகிறது.
* இது உங்கள் தொடைகள், இடுப்பு மற்றும் இடுப்பு தசைகளை பலப்படுத்துகிறது.
*இது கூடுதல் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.
*இது இடுப்புத் தள தசைகளை வலுப்படுத்த உதவுகிறது, எனவே கருப்பை நகர்தல் மற்றும் சிறுநீர் அடங்காமை ஆகியவற்றைத் தடுக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“