கூட்டணி ஆட்சிதான் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழகத்தில் தமிழக கட்சிதான் தலைமை தாங்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். கூட்டணி ஆட்சிதான் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழகத்தில் தமிழக கட்சிதான் தலைமை தாங்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். கூட்டணி ஆட்சிதான் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

author-image
WebDesk
New Update
Premalatha

கூட்டணி ஆட்சிதான் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை அண்ணா சாலையில் சி.கே.பெருமாளின் 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றை பற்றிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க.வின் டி.ஆர்.பாலு, அப்பாவு, தே.மு.தி.க.வின் எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisment

இந்நிலையில், கட்சி நிர்வாகிகளின் திருமண நிகழ்வு, கட்சி ஆலோசனைக் கூட்டம் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷா கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தார்.

திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கோவை வந்திருப்பதாகவும், அதேபோல தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் சந்திப்பு, உள்ளிட்ட பல்வேறு வேலைகளை கோவைகள் முடித்துவிட்டு இரவு கிருஷ்ணகிரி புறப்பட்டு செல்ல இருப்பதாகவும், நாளை கிருஷ்ணகிரியில மா விளைச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் கூறினார்.

கட்டாய கல்வி குறித்த கேள்விக்கு, அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டும், படித்தால் மட்டும்தான் எதிர்காலம் பிரகாசமாக சொந்தக்காலில் நிற்க வேண்டும். ஒவ்வொருவரும் தமிழ்நாட்டில் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் தே.மு.தி.க வின் விருப்பம் என்றார்.

Advertisment
Advertisements

காங்கிரஸ் கட்சி சார்பான விழாவில் சுதீஷ் கலந்துகொண்டது தொடர்பான கேள்விக்கு, பல ஆண்டு காலமாக, தொடரும் நட்பின் வெளிப்பாடாக சுதீஷ் விழாவில் கலந்துகொண்டார் என்றும், இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், இதற்கும் கூட்டணிக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

தே.மு.தி.க வின் தேர்தல் நிலைப்பாடு குறித்தான கேள்விக்கு, எங்களுடைய நிலைப்பாடு தற்போதைக்கு 8 மண்டலமாக பிரிந்து தமிழ்நாடு முழுக்க, 8 மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை அமைத்து தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் வெகு விரைவாக நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும், முதலில் அதை சீராக செய்து கொண்டுள்ளதாகவும், ஒரு மாதம் கழித்து தமிழக முழுவதும் சுற்றுப் பயணம் இருக்கிறது எனவும், கட்சியின் வளர்ச்சியை மட்டுமே நாங்கள் உற்று நோக்குகிறோம் என்றும் கூறினார். 

கடலூரில் ஜனவரி 9 ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இன்றைய தினம் நிலைப்பாடு கூட்டணி குறித்து தெளிவாக அறிவிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி யாருடைய தலைமையில் என்பது குறித்தான கேள்விக்கு, தமிழ்நாட்டுக்கு தமிழக கட்சிகளின் உடைய ஆட்சி இருந்தால், நன்றாக இருக்கும் என்று கூறினார். கூட்டணி கட்சி என்று வந்தால் வரவேற்க கூடிய ஒன்றுதான் யார் ? வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்தால் வரவேற்கலாம். எத்தனையோ ? மாநிலங்களில் அது சாத்தியமாக இருக்கிறது என்று கூறினார்.

ஸ்ரீகாந்த் குறித்த கேள்விக்கு, இதை அவர்கள் மட்டுமே பயன்படுத்தியதாக எடுத்துக் கொள்ள கூடாது, தமிழகமே போதை வஸ்துக்களால் மூழ்கி இருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாத விஷயம். அவர்கள் செய்த தவறுக்கான தண்டனை அவர்களுக்கு கிடைக்கும். இந்த அரசு போதை இல்லா, டாஸ்மாக் இல்லா, கள்ளச் சாராயம் இல்லா ஒரு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். 

தி.மு.க ஆட்சி எப்படி ? இருக்கிறது என்று கேள்விக்கு, தி.மு.க ஆட்சியில், இன்று நான் கோவையில் இருப்பதால் முதலில் இங்கு இருக்கும் பிரச்னைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அனைத்து சாலைகளுமே குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று உயிர்களை இழந்து கொண்டு இருக்கிறோம். மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தொய்வாக நடந்து கொண்டு இருக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும். குப்பை தரம் பிரிக்கும் இடம், எனச் சொல்லி மக்களால் பெரிய போராட்டம் நடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. பாதாள சாக்கடை அமைக்கப்படாமல் உள்ளது. கோயம்புத்தூர் என்றாலே ஒரு கிளீன் சீட்டி என்று நான் கேப்டன் காலத்தில் பார்த்து இருக்கிறேன். ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக மாறி உள்ளது. இது மிகவும் வருந்தக் கூடிய விஷயமாக உள்ளது. இதற்கு அரசு நிச்சயம் தீர்வு காண வேண்டும் என்பதையும் தான் வலியுறுத்துகிறேன் என்றும், கூறினார்.

விஜய் பற்றிய கேள்விக்கு, நான் அவருக்கு அறிவுரை கூறவேண்டிய வயது அவருக்கு இல்லை, அவருக்கான முடிவை அவர்தான் எடுக்க வேண்டும் என்று கூறினார். அதே போல மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மத்திய அரசு, மாநில அரசும் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: