/indian-express-tamil/media/media_files/89W4QHidsvnQqkcRAQHg.jpg)
Premalatha Vijayakanth
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொது மக்களும், ரசிகர்களும் கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.
இன்றும் தினசரி அவரது நினைவிடத்துக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரேமலதா விஜயகாந்த்,, விஜயகாந்த் நினைவிடத்திற்கு அன்னதானம் வழங்குவதற்காக வந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு சாமியார்’கேப்டன் எங்கும் போகவில்லை, உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருக்கிறார்’என்றார்.
பின்னர் திடீரென அருள் வந்தது போல் கேப்டன் குரலில் பேசிய அவர், என்னை பத்தி தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்க போகப்போறேன். பிரேமா உன் இதயத்தில்தான் நான் குடியிருக்கிறேன் என கூறினார்.
அதைக் கேட்ட பிரேமலதா ஒரு கணம் நெகிழ்ந்து போனார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.