விஜய் டிவி பிரபலம் பிரிங்கா வீட்டிற்கு அமிர் மற்றும் பாவனி வந்துள்ளனர். இதை ஒரு வீடியோவாக பிரிங்கா யூடியூப் சேனைலில் பதிவு செய்துள்ளார்.
பிரியங்கா வீட்டிற்கு அவரது நண்பர்கள் அமிர் மற்றும் பாவனி வந்துள்ளனர். பல நாட்கள் அமிர் பிரியங்காவை டீ போட்டு கொடுக்க சொல்லியுள்ளார். இதனால் இந்த முறை பிரியங்கா டீ போட்டு இருவருக்கும் கொடுத்தார். இந்நிலையில் அமிர் அதை குடித்துவிட்டு நன்றாக இருப்பதாக கூறுகிறார். ஆனால் பாவனி கசப்பதாகவும், அமிர் எவ்வளவு மோசமாக இருந்தாலும் குடிப்பார் என்று சொல்கிறார்.
தொடர்ந்து பிரியங்கா வீட்டை இருவரும் சுத்தம் செய்கின்றனர். இதில் 10 % மட்டுமே சுத்தம் செய்ததாகவும், முழுவதுமாக சுத்தம் செய்த பின்பு அவர்கள் இருவரும் குடிவந்துவிடுவார்கள் என்று கிண்டலாக அவர் சொல்கிறார். மேலும் பிரியங்கா தூங்கும் மெத்தையில் எறும்புகள் இருந்ததாகவும், அதில் அவர் தூங்கியதால் சில எறும்புகள் செத்துபோனதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இரவும் முழுவதும் இருந்துவிட்டு அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு இருவரும் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“