/indian-express-tamil/media/media_files/2025/05/16/XEkcuZ8blDLrw7WotJui.jpg)
Puja utensils cleaning Tips (Image: Google)
வீட்டில் உள்ள பூஜை அறை ஒரு புனிதமான இடமாகும். அங்கு நாம் இறைவனை வழிபடுகிறோம். பூஜை அறையில் உள்ள பூஜை சாமான்களை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
ஆனால் பித்தளை மற்றும் செம்பு பூஜை சாமான்கள் காலப்போக்கில் கறை படிந்து மங்கிப் போகலாம்.
அப்படி கருத்துப் போன பூஜை சாமான்களை சுத்தம் செய்வது எப்படி?
முதலில் பூஜை சாமான்களில் இருக்கும் பாசிகளை காட்டன் துணி அல்லது பேப்பர் வைத்து துடைத்து எடுக்கவும். பின்பு திருநீறு அல்லது கோலப்பொடி சேர்த்து துடைக்கவும். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, கல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். தண்ணீர் சூடானதும், அரை ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஷாம்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பூஜை பொருட்கள் அனைத்தையும் வெதுவெதுப்பான நீரில் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். இறுதியாக, அவற்றை வெளியே எடுக்கவும், அவை பளபளப்பாக சுத்தமாக இருக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.