கோயிலில் கிடைப்பதுபோல, புளியோதரை செய்ய முடியும். இப்படி புளியோதரை பொடி அரைத்து, செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 கப் கடலை பருப்பு
முக்கால் கப் உளுந்து
1 டேபிள் ஸ்பூன் தனியா
1 டேபிள் ஸ்பூன் மிளகு
அரை டீஸ்பூன் வெந்தயம்
1 கைபிடி கருவேப்பிலை
1 ஸ்பூன் எள்ளு
1 ஸ்பூன் எண்ணெய்
10 வர மிளகாய்
பெரிய அளவு புளி
பெருங்காயம் அரை ஸ்பூன்
உப்பு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை எடுத்துகொள்ள வேண்டும். அதை வறுக்க வேண்டும். தொடர்ந்து தனியா, மிளகு, வெந்தயம், ஆகியவற்றை வறுத்து எடுத்து வைத்துகொள்ளவும். கருவேப்பிலையை தனியாக வறுத்து கொள்ளவும். தொடர்ந்து எள்ளை தனியாக வறுத்துகொள்ள வேண்டும். எண்ணெய் சேர்த்து வர மிளகாய் வறுத்து கொள்ளவும். தொடர்ந்து புளியை சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்த எல்லாவற்றையும் பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். சூப்பரான புளியோதரை பொடி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“