தோசை மாவுடன் சிறிது அளவு கடலை மாவை சேர்த்து தோசை சுட்டால், தோசை பொன்னிறமாக வரும். மாமிசம் சமைக்கும்போது குறிப்பாக சிக்கன், மட்டன் கிரேவியில் எண்ணெய் அதிகமாகிவிட்டால், அரிசி மாவை அத்துடன் கலந்துவிடவும். பூரிக்கும் மாவு பிசையும் போது, தண்ணீரில் ஊறவைத்த பிரட்டை சேர்த்து பிசைந்து பூரி சுட்டால் பூரி மொறு மொறுவென வரும்.
புளிக்குழம்பு செய்யும்போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளித்தால், குழம்பு அதிக சுவையாகவும் மணமாகவும் இருக்கும். ஆப்பம் சாஃப்டாக வருவதற்கு மாவு அரைக்கும்போது, சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். மோர் குழம்பு செய்யும்போது தாளிக்க தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்தால் மிகவும் நல்லது. இது சுவையை அதிகரிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“