/indian-express-tamil/media/media_files/2025/05/31/ZrgB6mOKKKKgADExrzKD.jpg)
தோசைக் கல்லில் கொஞ்சம் டீ தூள் போட்டு கிளீன் பண்ணுங்க… தோசை சூப்பரா வரும்!
தோசைக்கல்லைப் புதியது போலப் பராமரிக்கவும், ஒவ்வொரு முறையும் மொறுமொறுப்பான தோசைகளைப் பெறவும் சில எளிய டிப்ஸ்கள் உள்ளன. கீர்த்தி சாரா டிப்ஸ் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ள டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம். தோசைக் கல்லில் முட்டை அல்லது மீன் சமைத்த பிறகு வரும் வாசனையை நீக்கவும், தோசைகள் ஒட்டாமல் வருவதற்கும் எளிய டிப்ஸ் தெரிந்து கொள்ளுங்கள்.
டீ தூள் கொண்டு வாசனையை நீக்குதல்: தோசைக்கல்லில் சமைத்த பிறகு வரும் வாசனையை நீக்க தேயிலைத் தூள் (டீ தூள்) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கல்லின் மீது டீ தூளைத் தூவி, பாத்திரம் தேய்க்கும் ஸ்கிரப்பரால் நன்றாகத் தேய்க்கவும். வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்வதால், கல்லில் சேரும் அழுக்குகள் நீங்கி, வாசனை மறைந்துவிடும். தேய்த்த பிறகு, கல்லை நன்றாகக் கழுவி சூடுபடுத்தவும்.
தோசைகள் கல்லில் ஒட்டாமல் வரவும், எளிதாக எடுக்கவும் ஐஸ் கியூப்ஸ் பயன்படுத்தலாம். சூடான கல்லின் மீது பெரிய ஐஸ் கியூப் வைக்கவும். அடுப்பு எரியும்போதே, பனிக்கட்டிகள் உருகும் வரை அவற்றைக்கொண்டு கல்லைத் தேய்க்கவும். இவ்வாறு செய்வதால், கல்லில் உள்ள மீதமுள்ள அழுக்குகள் தண்ணீரில் மிதப்பதைக் காணலாம். இது கல்லை முழுமையாகச் சுத்தப்படுத்தும். வாரம் ஒருமுறை இப்படி சுத்தம் செய்வதால், தோசைகள் கல்லில் ஒட்டாமல் வரவும், எளிதாக எடுக்கவும் முடியும்.
நன்றி: Keerthi Sara tips
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.