New Update
/indian-express-tamil/media/media_files/hUtOnHir38bnEVquJUCU.jpg)
இப்படி ஒரு முறை சாம்பார் செய்து பாருங்க. இந்த பொடி சேர்த்து செய்தால் செம்ம ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2ஸ்பூன்
மல்லி – 2 ½ ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
சிறிய அளவில் வெந்தயம்
வரமிளகாய் 6
துவரம் பருப்பு – 1 கப்
குழம்புக்கு தேவையான பொருட்கள்: எண்ணெய், கடுகு, உளுந்து, 1 பெரிய வெங்காயம் நறுக்கியது, 3 தக்காளி, 1 கத்திரிக்காய், 1 முருங்கைக்காய், மஞ்சள் பொடி, உப்பு, தண்ணீர், உப்பு.
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, அதில் மல்லி, சீரகம், வெந்தயம் சேர்த்து வறுத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்க. இன்னும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து அதில் துவரம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து வறுத்துகொள்ளவும். தொடர்ந்து இவை அனைத்தையும் பொடியாக்க வேண்டும். தற்போது ஒரு பாத்திரத்தில் கடுகு, உளுந்து, பெரிய வெங்காயம் நறுக்கியது, தக்காளி, கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் உப்பு, தண்ணீர், சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து அரைத்த பொடியை சேர்க்கவும். கடைசியாக உப்பு சரி பார்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.