நாய் கடித்தால் ரேபிஸ் தடுப்பூசி மட்டுமல்ல… இந்த மருந்தும் முக்கியம்; டாக்டர் அருண்குமார்

வெறிநோய் என்பது விலங்கின் கடியால் ஏற்படும் மூளைக் காய்ச்சல் (encephalitis). இந்த வைரஸ் மூளை, நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தால், அது 100% மரணத்தை ஏற்படுத்தும்.

வெறிநோய் என்பது விலங்கின் கடியால் ஏற்படும் மூளைக் காய்ச்சல் (encephalitis). இந்த வைரஸ் மூளை, நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தால், அது 100% மரணத்தை ஏற்படுத்தும்.

author-image
WebDesk
New Update
Rabies treatment

நாய் கடித்தால் ரேபிஸ் தடுப்பூசி மட்டுமல்ல… இந்த மருந்தும் முக்கியம்; டாக்டர் அருண்குமார்

வெறிநாய் கடி என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் அல்ல. தேசிய கபடி வீரர் பிரிஜேஷ் சோலங்கியின் சோகமான மரணம் இதை நமக்கு மீண்டும் உணர்த்துகிறது. ஒரு தெருநாயை காப்பாற்ற முயன்றபோது, அவர் கடித்துவிடப்பட்டார். காயம் சிறியது என்று சிகிச்சை எடுக்காமல் விட்டதால், அவருக்கு வெறிநோய் தாக்கி, அதுவே அவரது மரணத்திற்குக் காரணமானது. இந்த சோகமான நிகழ்வின் பின்னணியில், விலங்குகள் கடிக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்கிறார் டாக்டர் அருண் குமார்.

Advertisment

வெறிநோய் (Rabies) என்றால் என்ன?

வெறிநோய் என்பது விலங்கின் கடியால் ஏற்படும் மூளைக் காய்ச்சல் (encephalitis). இந்த வைரஸ் மூளை, நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தால், அது 100% மரணத்தை ஏற்படுத்தும். கடுமையான வலிப்பு, தசைப்பிடிப்பு, கோமா, நீர் அருந்துவதற்கு, சுவாசிப்பதற்கும் கூட ஏற்படும் பயம். இந்த வைரஸ் நாய் கடிக்கு மட்டும் அல்ல, பூனைகள், ஆடுகள், மாடுகள், ஏன் பறவைகள் உட்பட எந்த விலங்கின் கடியாலும் பரவலாம். எலிகள் இதற்கு விதிவிலக்கு.

பொதுவான தவறுகள் என்ன?

Advertisment
Advertisements

பலரும் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடத் தவறிவிடுகிறார்கள். ஆனால், சமீபத்திய வெறிநோய் மரணங்களில் 30%-க்கும் அதிகமானவை செல்லப்பிராணிகளின் கடியால் ஏற்பட்டவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறிய காயம் தானே என்று பலர் அலட்சியமாக இருப்பார்கள். இரத்தம் வரும் எந்தக் காயமும் 'வகை 3 காயம்' (Category 3 injury) என அழைக்கப்படுகிறது. இதற்கு சாதாரண தடுப்பூசி மட்டும் போதாது என்கிறார் டாக்டர் அருண்குமார்.

சரியான சிகிச்சை முறைகள் என்ன?

விலங்கு கடித்த உடன், முதலில் காயத்தை சோப்பு மற்றும் ஓடும் நீரில் நன்கு கழுவ வேண்டும். இது வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். வெறிநோய் தடுப்பூசி (Rabies Vaccine): கை அல்லது தொடைப் பகுதியில் செலுத்தப்படும் 4 டோஸ் தடுப்பூசிகள். இம்யூனோகுளோபின் (Immunoglobulin): இது மிகவும் முக்கியமானது. ரத்தம் வந்த காயங்களுக்கு, இந்த ஊசி காயம் ஏற்பட்ட இடத்தில் நேரடியாகச் செலுத்தப்பட வேண்டும். தடுப்பூசி போட்டாலும், இந்த இம்யூனோகுளோபின் ஊசி போடப்படாததால் பல இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

தடுப்புமுறைகள்:

உங்கள் செல்லப்பிராணிகளுக்குத் தவறாமல் தடுப்பூசி போடுங்கள். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, 'முன் வெளிப்பாடு தடுப்பூசி' (pre-exposure prophylaxis vaccine) போட்டுக்கொள்ளலாம். இது எதிர்காலத்தில் எதிர்பாராமல் கடி ஏற்பட்டால் ஒரு பாதுகாப்பு அடுக்கை வழங்கும். விலங்கு கடித்தால் அலட்சியமாக இருக்காமல், உடனடி மற்றும் சரியான சிகிச்சையைப் பெறுவது உயிரைக் காக்கும் என்கிறார் டாக்டர் அருண்குமார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: