Advertisment

பொன்மலை ரயில்வே என்ஜீனியருக்கு விருது வழங்கி பாராட்டிய மத்திய அமைச்சர்

ரயில்வே துறையில் சிறந்து விளங்கும் பணியாளர்களை பாராட்டும் வகையில் ‘அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Rways

இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் இயக்கியதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நாட்டின் 69-ஆவது ரயில்வே வாரவிழாவை முன்னிட்டு ரயில்வே துறையில் சிறந்து விளங்கும் பணியாளர்களை பாராட்டும் வகையில் ‘அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. 

Advertisment

அந்த விருந்தினை பெறுவதற்கு தெற்கு ரயில்வேயில் இருந்து 8 பணியாளர்கள் தேர்வாகி இருந்தனர். இவர்களுக்கு புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்வில் ரயில்வே அமைச்சர் விருதுகள் வழங்கி கௌரவித்தார். 

WhatsApp Image 2024-12-23 at 11.41.55

உற்பத்தித் திறனை மேம்படுத்த பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாகயும், செயல் திறனை மேம்படுத்தி செலவுகளை குறைத்தமைக்காகவும், பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் மூத்த பொறியாளர் டி.எம்.கோபால கிருஷ்ணனுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விருது வழங்கினார்.

Advertisment
Advertisement

WhatsApp Image 2024-12-23 at 11.41.54

டெல்லியில் விருது பெற்று திருச்சி திரும்பிய டி.எம்.கோபாலகிருஷ்ணரை திருச்சி ரயில்வே நிலையத்தில் மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், ரயில்வே சீனியர் பொறியாளர் மோகன்தாஸ், சீனிவாசன், சிந்தாமணி, சஹானா பிரியதர்ஷினி, அபிஷேக் ராகவ், காவ்யா பிரியதர்ஷினி,
மோகன், உதயா மற்றும் பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி, வரவேற்றனர். 

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment