வீடுகளில் இருக்கும் மழைநீர் சேமிப்பு தொட்டியை வீடியோ எடுத்து பகிர்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
மழைநீர் சேமிப்பு தொட்டி:
கிகி விளையாட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போடுவது போல சென்னை மக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை எடுத்து போட்டால் சிறந்த கட்டமைப்புகளுக்கு பரிசு வழங்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை சீர் செய்தல், மாடிகளை சுத்தம் செய்தல், கூழாங்கல் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது போன்ற புகைப்படங்களை எடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், மற்றும் சென்னை குடிநீர் வெப்சைட் ஆகியவற்றில் போடலாம் என்று குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், மக்களிடம் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் குடிநீர் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.மழை நீர் சேகரிப்பு தொட்டி மூலம் சேமிக்க வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் முன் ஏற்பாடுகளை செய்யும் வகையில் பொதுமக்களை தயார் படுத்தி வருகிறது.
இதுக் குறித்து குடிநீர் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், “ சென்னை மக்கள் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு படத்தினை எடுத்து வெளியிடலாம்.சிறந்த புகைப்படத்திற்கு சாம்பியன் பேட்ஜ் வழங்கப்படும்.சிறந்த புகைப்படங்களுக்கு பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மழை நீர் கட்டமைப்பு மற்றும் சீரமைக்கும் பணிகளை புகைப்படம் எடுத்து பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் போடலாம். மேலும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பற்றி பெயிண்டிங் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது” என்றும் கூறியுள்ளனர்.